பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், காரைக்குடி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஹெச்.ராஜா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்,
இது குறித்து ஹெச்.ராஜா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தற்போது நான் பழனியிலுள்ள இடும்பன் குளத்திற்கு ஆரத்தி வைபவத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் திண்டுக்கல் எஸ்.பி. அவர்களால் எவ்வித காரணமும் கூறாமல் கைது செய்யப்பட்டுள்ளேன். (சத்திரப்பட்டி அருகில்) அருகாமையில் உள்ள இந்து உணர்வாளர்களை சந்திக்க விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.