Advertisment

’நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மாட்டுத்தொழுவத்தில்தான்..’-எச்.ராஜா பேச்சு

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரை வைகை கரை அருகே, புட்டுதோப்பில் நடைபெற்ற பசு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று பேசினார்.

Advertisment

h

அப்போது அவர், ‘’நான் பிறந்ததே மாட்டுத்தொழுவத்தில்தான். நானே பால் கறந்து வீடு வீடாகச்சென்று பால்கொடுத்துதான் படித்தேன். அதனால்தான் சொல்கிறேன்...ரஜினிகாந்த் ரீல் லைப்பில் அண்ணாமலை என்றால் நான் ரியல் லைப்பில் அண்ணாமலை’’என்று தெரிவித்தார்.

Advertisment

மாநாட்டிற்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்தலாக் சொல்லி இஸ்லாமிய பெண்களின் வாழ்வுரிமையே பறிப்பதை மோடி தலைமையிலான அரசு தடுத்திருப்பதாக தெரிவித்தார். முத்தலாக் தடுப்பு சட்டத்தை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் பெண் அடிமை தனத்தை போற்றுகின்ற கட்சிகள் எனவும் அவர் விமர்சித்தார்.

மேலும், என்.ஐ.ஏவை பலப்படுத்தும் சட்டத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பயங்கரவாத தேச துரோகிகள் என விமர்சித்தார்.

H Raja
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe