தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமானதால் மே மாதம் 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அரசின் கட்டுப்பாடு நடவடிக்கைகளாலும், முன்னேற்பாடுகளாலும் கரோனா இரண்டாம் அலை தற்போது கட்டுக்குள் வந்திருக்கிறது. கரோனாவின் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது ஊரடங்கானது படிப்படியாகத் தளர்த்தி வருகின்றனர். அந்த வகையில், பல மாவட்டங்களில் இன்று (28.06.2021) முதல் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.
மீண்டும் திறக்கப்பட்ட உடற்பயிற்சி கூடங்கள்... (படங்கள்)
Advertisment