Advertisment

லாரியில் குட்கா கடத்தி வந்தவர் கைது

 Gutka smuggler arrested in lorry

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான் மசாலா, குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் பங்களாபுதூர் போலீசார் டி.ஜி. புதூர் நால்ரோடு அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக மாநில லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

Advertisment

அதில் சுமார் 10 கிலோ அளவிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான் மசாலா, குட்கா உள்ளிட்டவை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவர் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர், சிப்பாய் காலனியை சேர்ந்த ராமசாமி (55) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் கடத்திவரப்பட்ட சுமார் 10 கிலோ எடையிலான ரூ. 9,240 மதிப்பிலான பான் மசாலா, குட்கா பொருட்கள் மற்றும் அவற்றை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட லாரி, பணம் ரூ.3,400 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Advertisment
Erode gutka police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe