Skip to main content

நெல்லையில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 30 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

Published on 01/08/2018 | Edited on 27/08/2018
Gutka confiscated



அன்றாடம் கேரளாவிற்குத் தேவையான காய்கறி தொட்டு உணவு, உடை மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான அத்யாவசியமான அவசியமான கேரளவாசிகளின் உபயோகத்திற்கான பொருட்கள் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மூலமாக தமிழகத்தின் நெல்லைப் பகுதியிலிருந்து மாவட்ட எல்லையான புளியரைப் பார்டர் வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அது போன்ற வாகனங்கள் எல்லையில் உள்ள தமிழக மற்றும் கேரள அரசுகளின் மோட்டார் வாகன, போலீஸ், வனத்துறை மற்றும் சுங்கம் போன்ற நான்கு வகையான சோதனைச் சாவடிகளின் தணிக்கைக்குப் பின்பே பார்டர்ரைக் கடந்து கேரளா செல்கின்றன.
 

 

 

இது போன்ற வாகனங்களில் சில வேளைகளில் தடை செய்யப்பட்ட பொருட்களும் கடத்தப்படுவதுண்டு, அவைகளில் பலது பிடிபட்டலும் சிலதுகள் கவனிப்பின் அடிப்படையில் செல்வதுமுண்டு.
 

வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சில வேளைகளில் போதைப் பொருட்களும் கடத்தப்படுகின்றன. அண்மைக் காலமாகப் பிடிபட்டதில் கஞ்சா முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக ராஜபாளையத்திலிருந்து கஞ்சாவை கேரளாவுக்கு டூவீலரில் கடத்திச் சென்ற திருவனந்தபுரம் கல்லூரி மாணவர்கள் மூவர் செங்கோட்டை பார்டரில் இன்ஸ்பெக்டர் பிரதாபனால் பிடிபட்டுமிருக்கிறார்கள்.
 

 

 

இந்தச் சூழலில் நெல்லை மாவட்டத்திலிருந்து தொடர்ந்து போதைப் பொருள் கடத்தப்படுவதாக கேரளாவின் கொல்லம் மாவட்ட போதை தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹரிகுமாருக்குத் தகவல்வர அவரது தனிப்படை பார்டரின் ஆரியங்காவு பகுதியில் சோதனை நடத்தினர். அதிகாலை நெல்லையிலிருந்து கேரளாவுக்குள் நுழைந்த பிராய்லர் கோழி மினிலாரியை சோதனையிட்டதில் அதில் மறைத்துவைக்கப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா மூடைகள் பிடி பட்டுள்ளன. அவைகளைக் கைப் பற்றிய போலீசார் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் ரவி, மற்றும் உரிமையாளர் மகேஷ் இருவரையும் கைது செய்தார்.
 

 

 

பிடிபட்ட குட்கா சுமார் 800 கிலோ எடை கொண்ட 30 லட்சம் மதிப்புடையது. இவைகளைக் கடத்திக் கொண்டு போய் கேரளாவிலுள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், மற்றும் முந்திரி, தேயிலை தோட்டம், கட்டுமானப் பணிகளுக்கென்று கேரளா வந்து பணிபுரியும் வங்காளிகள், பீகார் மாநில தொழிலாளர்கள் போன்றவர்களிடம் அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்கிறார் நார்காட்டிக் பிரிவின் இன்ஸ்பெக்டரான ஹரிகுமார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டீக்கடையில் குட்கா விற்பனை; 3 பேர் கைது; 26 கிலோ பறிமுதல்

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Sale of Gutka at Tea Shop; 3 arrested; 26 kg seized

 

தமிழக அரசு குட்கா உள்ளிட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களுக்கு தடை விதித்துள்ளதோடு பள்ளி மற்றும் கல்லூரி உள்ள பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அவ்வபோது  ரகசிய தகவலின் பெயரில் பெட்டிக்கடை, மளிகைக் கடை, டீக்கடை, பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கைது செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியின் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில், பெருந்துறை போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனை செய்தபோது, விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 26 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த பெருந்துறை பிச்சாண்டம்பாளையம் சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த எட்வர்ட் அவரது அண்ணன் மகன் அருண்குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்து பெருந்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், எட்வரிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

 

 

Next Story

கட்டுக்கட்டாக சிக்கிய பணம்; வாக்காளர்களுக்கு வழங்க எடுத்துச் செல்லப்பட்டதா?

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Bonded money; Carried away to deliver to voters? in hyderabad

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

 

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதியும், தெலுங்கானா மாநிலத்தில் 30 ஆம் தேதியும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில், வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள், மது போன்ற பொருட்களை வழங்குவதை தடுக்க தேர்தல் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 

அந்த வகையில், தலைநகர் ஐதராபாத்தின் கச்சிபவுலி பகுதியில் பறக்கும் படை காவல்துறையினர் நேற்று (23-11-23) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார் அந்த பணத்தைக் கைப்பற்றினர். அப்போது அதில், ரூ.5 கோடி இருந்தது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த பணம் ஒரு வர்த்தக நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.