Advertisment

சுவாசக்கருவி இன்றி 4 மணி நேரம் சுவாசித்தார் குரு: மருத்துவர்களுடன் அன்புமணி ஆலோசனை

Kaduvetti_J._Guru

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக முன்னாள் எம்எல்ஏ குரு சுவாசக்கருவி இல்லாமல் சுவாசிக்க வைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் பயனாக அவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்று மொத்தம் 4 மணி நேரம் சுவாசக் கருவி இல்லாமல் மாவீரன் குரு சுவாசித்தார்கள்.

Advertisment

மாவீரன் குரு அவர்களின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அவரைப் பார்த்தார்.

Advertisment

தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவம் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின்மருத்துவர்கள் அடங்கிய குழுவுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அதன்படி குருவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

anbumani hospital J.Guru pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe