மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. அதையொட்டி திண்டிவனம் கோனேரிக்குப்பம் வன்னியர் கல்வி அறக்கட்டளை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று குருவுக்கு மரியாதை செய்தனர்.

Advertisment

Advertisment

z

z