தூத்துக்குடி கலவரம் தொடர்பாக எந்த காவல் நிலையத்திலும் நான் புகார் அளிக்கவில்லை என துணை தாசில்தார் கோபால் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் செந்தூர்ராஜன் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில்,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூடக்கோரி கடந்த 22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பாக திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலர் (துணை தாசில்தார்) கோபால் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதன் பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும். போலீசார் தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.
இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலராக (துணை தாசில்தாராக) பணிபுரிந்து வரும் கோபால் கடந்த 22ம் தேதி அன்று தூத்துக்குடி சப்-கலெக்டர் உத்தரவின் பேரில் நிர்வாக நடுவராக தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் பணியில் இருந்ததாகவும், அப்பகுதியில் எந்தவிதமான பிரச்னையும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக தான் எந்த ஒரு காவல்நிலையத்திலும் எந்த புகாரும் அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். ஆனால், தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்ததாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் அவரும் குடும்பத்தினரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும், எனவே மேற்படி செய்தி தொடர்பான உண்மைத்தன்மையை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் வருவாய்துறை அலுவலர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இதன்அடிப்படையில் கலெக்டர் பொய்யான புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வருவாய்த்துறை அலுவலர்களை இதுபோன்ற பொய்யான புகார் அளிக்க அரசுத்துறை அதிகாரிகள் வற்புறுத்துவதை தவிர்க்கவேண்டும் என வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் தூத்துக்குடி கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர். அம்மனுவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் குறித்து வருவாய்த்துறையினர் புகார் கொடுத்துள்ளதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் புகார் பொய்யானது என்று வருவாய் துறை மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச்சூடு: எந்த காவல் நிலையத்திலும் நான் புகார் அளிக்கவில்லை; துணை தாசில்தார் பரபரப்பு பேட்டி
சார்ந்த செய்திகள்
Next Story
“ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்க அனுமதிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால், அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை. அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது.
இதனையடுத்து உச்சநீதிமன்றம் கூறியதாவது, ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தது.
இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் கூறியதாவது ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.
சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டார்.
Next Story
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்... ரஜினிகாந்த் வழக்கறிஞர்கள் ஆணையத்தில் விளக்கம்
கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக பல பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் நேரில் ஆஜராக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. சீமான் கடந்த மாதம் ஆஜரான நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவர் என எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில் அவர் நேரில் ஆஜராகாமல் நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர்கள் தற்போது ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் இறுதியில் காயமடைந்த மக்களை நேரில் பார்க்க சென்ற ரஜினிகாந்த் தூத்துக்குடி விமானநிலைத்தில் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக பேசியிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவரிடம் இதுதொடர்பாக நேரில் விசாரணை ஆணையம் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரது வழக்கறிஞர் இளம்பாரதி உட்பட 3 வழக்கறிஞர்கள் ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆணையத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்ற ரஜினியின் கோரிக்கையை விசாரணை ஆணையம் ஏற்றுகொண்டது. அதேபோல் ரஜினியிடம் கேட்கவேண்டிய கேள்விகள் சீலிடப்பட்ட கவரில் அவரது வழக்கறிஞர்களிடம் கொடுக்கப்பட்டது.