காட்டிற்குள் பதுங்கியிருந்த இருவரை கண்ட போலீசார் அவர்களை விரட்டிச் சென்றுள்ளனர். போலீசாரை பார்த்த இருவரும் காட்டிற்குள் ஓடி மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கியை மட்டும் கிழே போட்டுவிட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. காட்டிற்குள் தப்பி ஓடியதால் அவர்களை துரத்திச் செல்ல முடியாததால், துப்பாக்கியுடன் போலீசார் திரும்பியுள்ளனர் என்றனர். ஆனால் தப்பித்து ஓடியவர்களை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ள காவல்துறை, வாலிப்பாறையைச் சேர்ந்த தினகரன் என்பவரது மகன் பிரபாகரன் மற்றும் தண்டியன்குளம் பெருமாள் என்பவரது மகன் சந்திரன் ஆகிய இருவர் என்றும், இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
காட்டிற்குள் எதற்காக துப்பாக்கியுடன் இருந்தனர். வேட்டையாடுவதற்காகவா?அல்லது வேறு ஏதேனும் குற்றச்சம்பவத்திற்காகவா? என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர் போலீஸ் வட்டாரத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.