Skip to main content

வருசநாடு வனப்பகுதியில் கள்ளத் துப்பாக்கி புழக்கம்!

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள வருசநாடு வனப் பகுதியில் துப்பாக்கியுடன் சிலர் சுற்றிவருவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறை, துப்பாக்கியை மட்டும் கொண்டுவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

theni


அப்படி என்ன தான் நடந்தது வருசநாடு வன காட்டில் என காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது... வருசநாடு மலைப்பகுதியில் வாலிப்பாறையை அடுத்து தாண்டியன்குளம் என்ற மலை கிராமம் உள்ளது. அங்கு மலையாளி காட்டுப் பகுதியில் சிலர் கஞ்சா மற்றும் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றிவருவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து வருசநாடு சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 

 

 


காட்டிற்குள் பதுங்கியிருந்த இருவரை கண்ட போலீசார் அவர்களை விரட்டிச் சென்றுள்ளனர். போலீசாரை பார்த்த இருவரும் காட்டிற்குள் ஓடி மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கியை மட்டும் கிழே போட்டுவிட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. காட்டிற்குள் தப்பி ஓடியதால் அவர்களை துரத்திச் செல்ல முடியாததால், துப்பாக்கியுடன் போலீசார் திரும்பியுள்ளனர் என்றனர். ஆனால் தப்பித்து ஓடியவர்களை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ள காவல்துறை, வாலிப்பாறையைச் சேர்ந்த தினகரன் என்பவரது மகன் பிரபாகரன் மற்றும் தண்டியன்குளம் பெருமாள் என்பவரது மகன் சந்திரன் ஆகிய இருவர் என்றும், இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. 

 


காட்டிற்குள்  எதற்காக துப்பாக்கியுடன் இருந்தனர். வேட்டையாடுவதற்காகவா?அல்லது வேறு ஏதேனும் குற்றச்சம்பவத்திற்காகவா? என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்  போலீஸ் வட்டாரத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது