Skip to main content

குஜராத் மாணவிக்கு மதுரையில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை; இருவர் கைது

Published on 12/04/2023 | Edited on 12/04/2023

 

Gujarat student incident in Madurai; two arrested

 

மதுரை வந்திருந்த குஜராத் மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைனில் சார்ட்டர்ட் அக்கவுண்ட் படித்து வந்தார். ஆன்லைனில் சார்ட்டட் அக்கவுண்ட் குறித்து படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு மதுரையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதற்காக குஜராத்தை சேர்ந்த அந்த மாணவி மதுரை வந்துள்ளார். மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.

 

இதேபோல் ஆன்லைன் வகுப்பில் அறிமுகமான சென்னை பெரம்பூரை சேர்ந்த அஷீஷ் ஜெயின், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெராம் கதிரவன் தங்கியிருந்துள்ளனர். அப்பொழுது குஜராத் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை சாக்காக எடுத்துக் கொண்டு மாணவிக்கு உதவுவதாக நடித்த மாணவர்கள் இருவரும் மருந்து கொடுப்பதாகக் கூறி மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்துள்ளனர். சிறிது நேரத்திலேயே மாணவி மயக்கமடைந்த நிலையில் இருவரும் தனித்தனியாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

மறுநாள் குஜராத்திற்கு சென்ற மாணவிக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். பிறகு மாணவி மதுரையில் நடந்த சம்பவத்தை பெற்றோருக்கு கூறிய நிலையில் அவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். குஜராத்தில் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளதால் மதுரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

 

இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவி ஆன்லைன் மூலமாக மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயருக்கு புகார் அனுப்பினார். இது தொடர்பாக  மாணவியிடம் வாட்ஸ்ஆப் வீடியோ காலில் மதுரை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.