Skip to main content

பழக் குடோன் போர்வையில் குட்கா! குமாியில் கொடிகட்டி பறக்கும் விற்பனையில் அரசியல் பிரமுகா்கள்!

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் குட்கா பதுக்கலில் அமைச்சா்கள் முதல் காவல்துறை உயா் அதிகாாிகளின் தொடா்பு விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன் விசாரணை கூட சிபிஐ வசம் உள்ளது.
            

 

இந்தநிலையில் பெங்களூரு, மும்பை மற்றும் ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் குட்கா புகையிலை பொருட்கள் குடோன்களில் பதுக்கல் செய்யப்பட்டியிருப்பதும், மேலும் விற்பனையிலும் கொடிகட்டி பறக்கிற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

 Gudka sales in kumari

 

மாா்த்தாண்டத்தில் 1 கோடி ருபாய் மதிப்பில் பதுக்கி வைத்தியிருந்த குட்காவை போலிசாா் கண்டுபிடித்தனா். நேற்று நாடு முமுவதும் புகையிலை தடுப்பு தினம் கொண்டாடப்பட்ட நிலையில் போலிசாாின் அதிரடி நடவடிக்கையால் குட்காவில் கொடிகட்டி பறந்த கும்பலை கைது செய்தனா்.

 

 

மாா்த்தாண்டத்தில் பழ குடோன் என்ற போா்வையில் குட்கா குடோன் அமைத்து தமிழகம் மற்றும் கேரளாவுக்கு சொகுசு காாில் சென்று  சப்ளை செய்து வந்துள்ளனா். மேலும் குமாியில் சாதாரண பெட்டி கடைகளில் இருந்து பொிய சூப்பா் மாா்கெட் வரை இங்கிருந்து குட்கா சப்ளை செய்யபட்டுள்ளது. இதற்கு போலிசாா் சிலரும் மாமூல் வாங்கி கொண்டு இந்த கும்பலுக்கு உடந்தையாக இருந்துள்ளனா். 
              

 Gudka sales in kumari

 

இந்த நிலையில் பொதுமக்களிடமிருந்து தொடா்ந்து வந்த புகாாின் அடிப்படையில் தக்கலை சரக காவல் துணை கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலிசாாின் அதிரடி நடவடிக்கையால் காங்கிரஸ் பிரமுகா் செல்வராஜின் 2 குட்கா குடோன்களை கண்டுபிடித்து அதற்கு சீல் வைத்ததோடு, செல்வராஜையும் கைது செய்தனா். மேலும் மாா்த்தாண்டத்தில் கடையில் வைத்து மொத்த விற்பனை செய்து வந்த அதிமுக பிரமுகா் சத்திய நேசன், மற்றும் ஆனந்த சத்யா, வெளி மாநில விற்பயைாளா் முகம்மது அலியையும் கைது செய்தனா். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

சமோசாவில் கருத்தடை சாதனம்; வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Shocking information that came out on A contraceptive device in a samosa;t!

மகாராஷ்டிரா மாநிலம், புனேவின் பிம்பரி - சின்ச்வாட் பகுதியில் பிரபல தனியார் நிறுவனத்தின் கேண்டீன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு விற்கப்படும் சமோசா மிகவும் பிரசித்தி பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (08-04-24) இந்த கேண்டீனில் விற்கப்பட்ட சமோசாவில் மாட்டிறைச்சி, கருத்தடை சாதனம், கற்கள், புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் கலந்து விற்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில், போலீசார் அதிரடியாக அந்த கேண்டீனுக்கு சென்று சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில், போலீசாருக்கு கிடைத்த தகவல் உண்மை என கண்டறியப்பட்டது. இதில் அதிர்ச்சியடைந்த போலீசார், அங்கிருந்த சமோசாக்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

அந்த விசாரணையில், ரஹீம் ஷேக், அசோர் ஷேக், மற்றும் மசார் ஷேக் ஆகியோரின் எஸ்.ஆர்.ஐ எண்டர்பிரைசஸ், அந்தத் தனியார் நிறுவனத்திற்கு சிற்றுண்டி வழங்கும் ஒப்பந்தத்தை வைத்திருந்தது. இந்த நிலையில், எஸ்.ஆர்.ஐ எண்டர்பிரைசஸ் வழங்கிய சிற்றுண்டியில் ஒரு முறை பேண்டேஜ் இருந்ததால் இவர்களின் ஒப்பந்தத்தை, அந்தத் தனியார் நிறுவனம் ரத்து செய்துள்ளது. அதன் பின்னர், அந்த நிறுவனத்திற்கு சிற்றுண்டி வழங்கும் ஒப்பந்தம் மனோகர் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு கைமாறியுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த எஸ்.ஆர்.ஐ எண்டர்பிரைசஸின் நிறுவனர்களான ரஹீம் ஷேக், அசோர் ஷேக் மற்றும் மசார் ஷேக் ஆகியோர், மனோகர் எண்டர்பிரைசஸில் பணிபுரியும் இரண்டு ஊழியர்களை அழைத்து, சமோசாவில் கருத்தடை சாதனம், குட்கா, மாட்டிறைச்சி, புகையிலை போன்ற பொருட்களை அடைத்து விற்பனை செய்யுமாறு கூறியுள்ளனர். இதைக் கேட்ட மனோகர் எண்டர்பிரைசஸின் ஊழியர்களான ஃபிராஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகியோர், சமோசாவில் அந்த பொருட்களை அடைத்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ரஹீம் ஷேக், அசோர் ஷேக், மசார் ஷேக், ஃபிராஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.