Skip to main content

சாலை பாதுகாப்பு வாரவிழாவில் பாரம்பரிய உணவு கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்திய காவலர்கள்

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

சாலை பாதுகாப்பு வார விழாவின் இறுதிநாள் நிகழ்ச்சியை கலைநிகழ்ச்சியும்,பாரம்பரிய உணவு வகைகளும் கலந்த பிரம்மாண்ட நிகழ்வாக நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர் பந்தநல்லூர் காவல்துறையினர்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தநல்லூர் காவல் சரகத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவின் கடைசி நிகழ்வு பந்தநல்லூர் கடைவீதியில் நடந்தது. பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி கடைவீதி வரை அரை கிலோ மீட்டர் கிராமிய பாடல்கள், கரகாட்டம் என கலைநிகழ்ச்சியோடு வந்தது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரத்தை பந்தநல்லூர் ஆய்வாளர் சுகுணா வழங்கிவந்தார், பேரணியில் மாணவர்கள், பொதுமக்கள், வணிகர்கள் புடைசூழவந்தனர்.

துண்டுபிரசுரத்தில் " தலைக்கவசம் உயிர்க்கவசம், தலைக்கவசம் அணிவீர் உயிரிழப்பைத் தவிர்ப்பீர், அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர், இருசக்கர வாகனம் இருவர் செல்ல மட்டுமே, அதிக பாரம் ஆபத்தில் முடியும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விடு, மருத்துவமனை பள்ளி மற்றும் கல்லூரி அருகில் ஒலி எழுப்பாதே," என்பன உள்ளிட்ட 20 சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வரிகளை பட்டியலிட்டு இருந்தனர்.

நிகழ்ச்சியை பந்தநல்லூர் காவல்துறை ஆய்வாளர் சுகுணா ஏற்பாடு செய்திருந்தார், நிகழ்ச்சிக்கு திருவிடைமருதூர் வட்டத்திற்குட்பட்ட திருவிடைமருதூர், நாச்சியார்கோவில்,  திருப்பனந்தாள், உள்ளிட்ட காவல்துறை ஆய்வாளர்களும் காவலர்களும் கலந்துகொண்டு சாலை விதிகள் குறித்து பேசினர்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கரகாட்டத்துடன் கூடிய கிராமிய பாடல்களும், விழிப்புணர்வு குறித்தான ஆடல் பாடல்களும் முழங்கின. பாரம்பரிய முறையில் செய்யப்பட்டுள்ள உணவு வகைகளை மாணவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என குழுமியிருந்த அனைவருக்கும் வழங்கி அசத்தினர்.

வழக்கமாக சாலை பாதுகாப்பு விழா என்பதை சம்பிரதாய விழாவாக நினைத்து பத்து பைக்கில் வந்து நோட்டீஸ் கொடுத்துவிட்டு செல்லுவதே வாடிக்கையாக பார்த்துவரும் நிலையில், வாகனம் ஓட்டும்போது உயிரை பாதுகாக்க என்னென்ன செய்யவேண்டுமோ, அதே போல் உடல்நலத்தை பாதுகாக்க ரசாயனத்தை தவிர்த்து பாரம்பரிய உணவும் அவசியம் என்பதுபோலவும்  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது மிக அருமை என பலரும் பேசியதை காணமுடிந்தது.

  

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.