Skip to main content

காவலர் பணிக்கான வயது வரம்பில் தளர்வு கோரி போராட்டம்! 

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
Guard work


புதுச்சேரியில் புதியதாக நியமிக்கப்படவுள்ள 537  காவலர் பணிக்கான தேர்வினில் வயது வரம்பு தளர்த்த வேண்டும் என கோரி பட்டதாரி இளைஞர்கள்  பல்வேறு புகார் மனுக்கள் அரசுக்கு அளித்ததுடன் பல்வேறு போராட்டங்களையும்  நடத்தினர். 
 

முதல்வர் நாராயணசாமி வயது வரம்பில் தளர்வு ஏற்படுத்தி தருவோம் என உறுதியளித்தார். அது சம்பந்தமாக கோப்புகள் அனுப்பியதாகவும்  கூறினார். 


இந்த நிலையில் தேர்விற்கான விண்ணப்பம் பெறும் கடைசி தேதி 22.09.2018 என அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் வயது வரம்பு தொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்பட வில்லை.
 

அதேசமயம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சட்டப்படி ஆர்.ஆர் மாற்றம் கொண்டு வந்த பிறகு தான் வயது வரம்பில் தளர்வு உருவாக்கப்படும் என கூறுவதாக  தகவல் வெளியாகியுள்ளன.
 

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு எடுக்கும் முடிவிற்கு ஏற்றபடி துணைநிலை ஆளுநர் ஒரு முறை தளர்வு ஏற்படுத்தி தர அதிகாரம் உள்ளது என கூறும் பட்டதாரி இளைஞர்கள், வேண்டுமென்றே பல்வேறு காரணங்களை காட்டி பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பு இழந்துள்ள இளைஞர்களுக்கு எதிராக நடப்பதாக குற்றம் சாற்றுகின்றனர்.
 

தற்போது பொதுபட்டியல் 18 - 22, பிற்படுத்தப்பட்ட- மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 18 - 25, தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவருக்கு 18 -  27 என வயது வரம்பு உள்ளது.  ஆனால் தமிழகத்தில் பொதுப்பட்டியல் 18 - 24,  பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 - 26 வயது.  தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவர் 18 - 29 வயது என அரசாணை வெளியிட்டு 2017 ஆம் ஆண்டு காவலர்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் ரெயில்வே துறை உள்ளிட்டவைகளுக்கும் இதே வரம்புதான்.  
 

 தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் புதுச்சேரி மாநிலம் பின்பற்றும் வயது வரம்பை விட இரண்டு ஆண்டு அதிகமாக உள்ள நிலையில் புதுச்சேரி மாநிலம் மட்டும் இரண்டு ஆண்டு குறைத்து வயது வரம்பை வைத்திருப்பது ஏன் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர். 
 

புதுச்சேரி அரசு நான்கு நாட்களில் தங்களது விண்ணப்பம் ஏற்கப்படும் என அறிவிப்பு வெளியிட்ட நிலையில் ஆன்லைன் மூலம் விண்ப்பிக்கும் போது  விண்ணப்பங்களை ஏற்க மறுப்பதாக இளைஞர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
 

அதையடுத்து  ராஜா திரையரங்கம் அருகே ஒன்று கூடிய பட்டதாரி இளைஞர்கள் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சுவாமிநாதன் தலைமையில்  பேரணியாக வந்தனர். 
 

தலைமை தபால் நிலையம் வந்தவர்கள் தபால்  மூலமாக  விண்ணப்பங்களை காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்பினர்.  விண்ணப்பத்தினுடன்  வயது வரம்பு தளர்வு கேட்டு வேண்டுகோள் கடிதமும் இணைத்தனர். 
 

 துணைநிலை ஆளுநர் மற்றும் மாநில முதல்வர் பட்டதாரி இளைஞர்களின்  நியாமான போராட்டத்திற்கு மதிப்பளித்து அனுப்பிய விண்ணப்பங்களை ஏற்க வேண்டும் எனவும்,  இரண்டு நாட்களில் நல்ல தீர்வு எட்டவில்லை என்றால் சாகும் வரை உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.  
 

இப்போராட்டத்தில் புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முருகன், எழிலன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சுகுமாரன்,  தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளங்கோ,  தலித் பாதுகாப்பு இயக்கம் ராஜா. இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அறிவுமணி,  இந்திய இளைஞர் முண்ணனி கலைப்பிரியன்,  பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா,  சட்டப்பஞ்சாயத்து ஜெபின்,  அரசியல் களஞ்சியம் கந்தகுமார்,  திரிணாமுல் காங்கிரஸ் எத்திராஜ்,  திராவிடர் கழகம் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர்  பங்கேற்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.