ADVERTISEMENT
ADVERTISEMENT
வேலைநிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் என்ற உத்திரவாதத்தை நீதிமன்றத்திலிருந்து ஜாக்டோ ஜியோ அமைப்பு திருப்ப பெற்றுள்ளது.
இதனால் திட்டமிட்டபடி ஜனவரி 22 ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்த ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஜாக்டோ ஜியோ முடிவெடுத்துள்ளதாக தகவல். ஊதிய முரண்பாடுகளை களைய தமிழக அரசு மேலும் அவகாசம் கோரியதால் வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் அதேபோல் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
ADVERTISEMENT
Show comments