தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த மற்ற மாநில ஆதரவையும் பெற வேண்டும். ஜிஎஸ்டி கவுன்சிலில் இருக்கும் வாக்கெடுப்பு முறையைப் அ.தி.மு.க. அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடிதம் எழுதிவிட்டால் ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு ஈடுசெய்துவிடாது என்பதை அரசு உணர வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை பெறாமல் இருப்பது தமிழகத்தின் நிதி தன்னாட்சி உரிமைக்கு ஆபத்தானது.' இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.