Skip to main content

தேர்வு நேரம் மாற்றம், வயது வரம்பு அதிகரிப்பு: குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு அறிவிப்பை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி 

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

group2, group2a announcement out now

 

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது. 

 

தமிழக அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, 2, 2ஏ, 4 உட்பட பல்வேறு தேர்வுகளை நடத்திவருகிறது. அந்த வகையில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பிப்ரவரி 23 முதல் மார்ச் 23ஆம் தேதிவரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வானது மே 21ம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக காலை நடைபெறும் தேர்வுகள் 10 மணிக்கு தொடங்கி நண்பகல் 1 மணிவரை நடைபெற்றுவந்த நிலையில், இந்தமுறை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி மதியம் 12.30க்கு தேர்வு முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகலில் நடைபெறும் தேர்வு வழக்கம்போல 2 மணிக்கு தொடங்கி 5 மணிவரை நடைபெறவுள்ளது.

 

அதேபோல, பொதுப்பிரிவினருக்கான வயது வரம்பு 30லிருந்து 32ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்வு நடைபெறாததால் இந்த வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்