குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: விசாரணைக்காக 5 பேரை அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீஸ்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் ஆகிய தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் ஐஏஎஸ் தலைமையில் விசாரணை நடைபெற்றது.

Keelakarai

ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி மற்றும் கீழக்கரை தாசில்தார் வீர ராஜா, 2 ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் என ஐந்து பேரை விசாரணைக்காக இன்று சிபிசிஐடி போலீசார் சென்னைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் ஒருசில ஊழியர்கள் பணிக்கு வராமல் உள்ளனர். வந்தால் நாமும் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுவிடுவார்களோ என்ற பயத்தில் உள்ளனர்.

group 4 issue Police investigation
இதையும் படியுங்கள்
Subscribe