Skip to main content

அனுமதி மறுத்ததால், சாலை மறியலில் ஈடுபட்ட குரூப் 2 தேர்வர்கள்! 

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

Group 2 selectors involved in road blockade for refusing permission!

 

தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் 5,529 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நேற்று முன்தினம் (21/05/2022) நடைபெற்றது. இதில் 9 லட்சத்து 95 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். அதன்படி, தேர்வர்கள் அனைவரும் தங்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையங்களுக்கு தேர்வு நாளன்று காலை 09.00 மணிக்கு முன்னதாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், செஞ்சி சாலையில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு தேர்வு எழுத வருபவர்களை அனுமதித்து வந்தனர். இந்த நிலையில், காலை 09.00 மணிக்கு மேல் காலதாமதமாக வந்தவர்களை அதிகாரிகள் தேர்வு எழுத உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். 

 

இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வர்கள் நீண்ட தூரம் வெளியூர்களில் இருந்து பயணம் செய்து வருகிறோம். குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வசதி இல்லை. அதனால் கால தாமதமாகி விட்டது. எனவே எங்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறி வாக்குவாதம் செய்தனர். அதிகாரிகள் நேரக் கட்டுப்பாட்டை மீறி அனுமதிக்க முடியாது என்று உறுதியாகத் தெரிவித்தனர். 

 

இதையடுத்து, தேர்வு எழுத வந்த சுமார் 11 பேர் மற்றும் அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரோசனை காவல் நிலைய காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்வு எழுத அனுமதி பெற்றுத் தருவதாக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உறுதியளித்தனர். 

 

போராட்டம் கைவிடப்பட்டதையடுத்து காவல்துறையினர் தேர்வு மையத்தில் இருந்த அதிகாரிகளைச் சந்தித்து இது குறித்து பேசியபோது அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து காலதாமதமாக தேர்வு எழுத வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு; டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
TNPSC Notification on 1,253 people selected to fill vacancies;

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டி.என்.பி.எஸ்.சி மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி மூலம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான காலத்தில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவிப் பொறியாளர் (கட்டடவியல்) உள்ளிட்ட பதவிக்கு 752 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.