Skip to main content

பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப் 4 தேர்வு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

K;L

 

தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி மாதம் முதல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், போட்டி தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு இதுதொடர்பான மின்னஞ்சல்களை அனுப்பி தேர்வு நடைபெறும் தேதிகளை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான அறிவிப்புகளை அதன் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டில் 32 போட்டி தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரவித்தார். மேலும் பேசிய அவர், வரும் பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வெளியான 75 நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு போட்டி தேர்வும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு வரும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்படும் எனவும், புதிய முறையில் ஒஎம்ஆர் ஷீட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.என்.பி.எஸ்.சி தேர்வர்கள் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Important announcement on Attention TNPSC Candidates

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அதே போல், 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும். 29 பணியிடங்களுக்கான குரூப் 1-B மற்றும் குரூப் 1-C தேர்வு ஜூலை 12ஆம் தேதி நடைபெறும். 

2,030 காலி பணி இடங்களுக்கான குரூப்-2, குரூப்- 2A தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும். அதே போல், டிப்ளமோ/ ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர பிற அரசு தேர்வுகளுக்கான தேதிகளையும் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு; டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
TNPSC Notification on 1,253 people selected to fill vacancies;

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டி.என்.பி.எஸ்.சி மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டி.என்.பி.எஸ்.சி மூலம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலான காலத்தில் உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவிப் பொறியாளர் (கட்டடவியல்) உள்ளிட்ட பதவிக்கு 752 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளது.