Advertisment

"திட்டமிட்டபடி மே 21- ஆம் தேதி குரூப்- 2 தேர்வு நடைபெறும்"- டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலச்சந்திரன் பேட்டி! 

publive-image

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அரசு தேர்வுப் பணியாளர் ஆணையத்தின் தலைவர் பாலச்சந்திரன், "வரும் மே 21- ஆம் தேதி அன்று குரூப்- 2 தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும். 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்- 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48 பேர் குரூப்- 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

Advertisment

தமிழ் வழியில் படித்தவர்கள் 79,942 பேர் குரூப்- 2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப்- 2 தேர்வு நடைபெற உள்ளது. காலை 09.00 மணிக்கு பின் தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதிகபட்சமாக சென்னையில் ஏழு மையங்களில் 1,15,843 பேர் தேர்வு எழுதவுள்ளனர். குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் மூன்று மையங்களில் 5,624 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

Advertisment

குரூப்- 2, குரூப் - 2ஏ தேர்வைக் கண்காணிக்க 333 பறக்கும் படைகள், 6,400 சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூன் மாத இறுதியில் குரூப்- 2 தேர்வு முடிவுகளை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது." இவ்வாறு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.

Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe