Advertisment

மே 21ம் தேதி குரூப் 2 தேர்வு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ரகத

குரூப்-2 தேர்வு வரும் மே 21ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.

Advertisment

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களை தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்து வருகிறது. கிராம நிர்வாக அதிகாரி முதல் துணை ஆட்சியர் வரை இந்த தேர்வின் மூலம் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எழுத்து தேர்வில் ஆரம்பித்து நேர்காணல் வரை பல முறைகளில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக சில ஆண்டுகளாக தேர்வுகளை தேர்வாணையம் நடத்தாமல் இருந்து வந்தது. தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் தேர்வு நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

Advertisment

இந்நிலையில் தற்போது குரூப்-2 தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 21ம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் இதற்காக வரும் 23ம் தேதியில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe