Skip to main content

குரூப்- 1 விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தல்!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

group 1 examiners instruction tnpsc

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்- 1 விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் பதிவேற்றம் குறித்து சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

 

டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், "குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வுக்குத் தற்காலிகமாகத் தேர்வானவர்கள், அசல் சான்றிதழைப் பதிவேற்ற வேண்டும். பிப்ரவரி 16- ஆம் தேதியிலிருந்து மார்ச் 15- ஆம் தேதி மாலை 05.45 மணிக்கு முன், அரசு இ- சேவை மையங்கள் மூலம், அசல் சான்றிதழை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். தேர்வர்கள் ஆதார் எண்ணை ஒருமுறை பதிவேற்றத்தில் இணைத்தால் மட்டுமே பதிவேற்றம் செய்யமுடியும். தேர்வுக் கட்டணம் ரூபாய் 200- ஐ மார்ச் 15- ஆம் தேதிக்கு முன் கட்டாயம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்