Skip to main content

ஒஎன்ஜிசியால் கறுப்பு நிறத்தில் வரும் குடிதண்ணீர் பீதியில் பொதுமக்கள்.

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

"பளிச்சென்று இருந்த தண்ணீர் தற்போது நூறுமீட்டருக்கு அப்பால் வந்தாலே தூர்நாற்றம் அடிக்கிறது, இதற்கு காரணம் ஓஎன்ஜிசி தான்," என்று கலங்குகிறார்கள் பொதுமக்கள்.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது பழையபாளையம், காடுவெட்டி, கொடைக்காரமூலை, பாலக்காடு உள்ளிட்ட கிராமங்கள் அங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 2000 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். 4 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். எப்போதும் பசுமை மங்காமல் இருந்த அந்தபகுதி ஓஎன்ஜிசி யால் பாலைவனமாக மாறிவருகிறது.
 

ground water turns black



கடந்த நான்கு ஆண்டுகளாக நிலத்தடி நீர் நிறம் மாறி கருப்பாக வரத்துவங்கியுள்ளது. ஊராட்சி சார்பில் அமைத்துக் கொடுக்கப்பட்ட கை பம்புகளிலும், சொந்தமாக வீடுகளில் வைத்துள்ள கை பம்புகளிலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நல்ல தண்ணீர் கிடைத்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் நிறம் மாறி கருமையாகவும், துர்நாற்றம் வீசியபடியும் வருகிறது.

தண்ணீருக்காக  நாள்தோறும் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. கருமை நிற தண்ணீரால் தொற்று நோய்பரவும் என்கிற அச்சமும் அவர்களை தற்பொது  அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்," பழைய பாளையம் கிராமத்தில் ஓ என் ஜி சி நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் எடுக்க துரப்பணபணிகளை மேற்கொண்டு வருகிறனர். அதன் விளைவாக எங்கள் பகுதி நிலத்தடி நீரீன் தன்மை படிப்படியாக மாறி கடந்த சில நாள்களாக பழையபாளையம் கிராமம் முழுவதும் உள்ள பெரும்பாலான கிணறுகளிலும், அடி பம்புகளிலும் தண்ணீர் முழுமையாக கருப்பு நிறத்தில் மாறி வரத்துவங்கிவிட்டது. அதோடு அதிக துர்நாற்றமும் வீசியபடி வருகிறது. 

ஒருவீட்டின் கை பம்பில் தண்ணீர் அடித்தால் பத்து வீடுகளுக்கு அப்பால் உள்ளவர்களின் வீட்டில் ஊள்ளவர்களுக்கு கூட தூர்நாற்றம் வீசுகிறது, வீட்டில் நிம்மதியாக சாப்பிட முடியாத நிலமையில் உள்ளோம். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வாரம் ஒரு முறையே எங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் அதை குடிநீருக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் மற்றபடி அத்தியாவசிய தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. இதனால் எங்களது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய 5 கிலோ மீட்டர் தூரம் தண்ணீரை தேடி செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தண்ணீர் இல்லாமல் மாசுபட்ட தண்ணீரால் வீடுகளை காலி செய்துவிட்டு வேறு இடம் தேடி அகதிகளாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.


விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது, ஒஎன்ஜிசி எண்ணெய் துரப்பண பணியை மேற்கொண்டு வருவதால், பழையபாளையம், வேட்டங்குடி, புதுப்பட்டினம், தாண்டவன்குளம், உள்ளிட்ட 8 கிராமங்களில் நிலத்தடி நீரில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது." என்கிறார்கள்.

"நாட்டுக்கே சோறுபோட்ட டெல்டா விவசாயமும்,விவசாயிகளும் தண்ணீருக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளிய நமது அரசுகளை என்ன செய்யமுடியும், போராடினால் வழக்கு போடுவாங்க, வேறு என்ன செய்யமுடியும்,"என ஆத்திரமடைகிறார்கள் விவசாயிகள்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.