Skip to main content

திருமணமான மூன்றாவது நாளே படுக்கை அறையில் உயிரிழந்து கிடந்த மணமகன்; உறவினர்கள் முற்றுகை

Published on 24/09/2023 | Edited on 24/09/2023

 

The groom who was found in his bedroom on the third day of marriage; Relatives siege

 

திருமணமான மூன்றாவது நாளே மணமகன் படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மணமகனின் வீட்டார் போலீஸில் புகாரளித்த சம்பவம் செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் மஞ்சுநாதன்-ராணி தம்பதி. இவர்களுடைய மகனான சரவணனுக்கு செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரத்தைச் சேர்ந்த உறவினர் பெண்ணான சுவேதா என்பவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மாமியார் வீட்டில் விருந்துக்காக தங்கியிருந்த நிலையில் திருமணம் ஆன மூன்றாவது நாளே வீட்டு படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மணமகன் சரவணன் சடலமாக கிடந்துள்ளார்.

 

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணன் உயிரிழந்த வழக்கை சந்தேக வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணமகன் வீட்டார் சரவணனின் உடலை சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்த நிலையில் சரவணன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இந்த உயிரிழப்பு சம்பவத்தில் மர்மம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

 

போலீசார் விசாரணையில் சரவணன் திருமணம் செய்து கொண்ட மணப்பெண் சுவேதா ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் இந்த திருமணத்தில் அவருக்கு சம்மதம் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதே நேரம் மணமகன் சரவணன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு உறுதியற்றவர் அல்ல எனக் கூறும் மணமகனின் பெற்றோர்கள், இது திட்டமிட்ட கொலை. மணப்பெண் வீட்டாரை விசாரிக்க வேண்டும் என காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டு வேலைக்கு சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை!

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Youth misbehave with a 13-year-old girl while doing domestic work

அரியானா குர்காவன் பகுதியில் உள்ள வீட்டில் வேலை செய்வதற்காக 13 வயது சிறுமியை மாதம் 9 ஆயிரம் சம்பளத்திற்கு கடந்த ஜூன் மாதம் வேலைக்கு சேர்த்துள்ளனர். முதல் இரண்டு மாதத்திற்கு மட்டும் அந்த பெண்ணின் தாயாருக்கு சம்பளப் பணத்தை வீட்டின் உரிமையாளர் சசி என்ற பெண் கொடுத்துள்ளார். ஆனால் அதன் பின் சம்பளப்பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளனர். அத்தோடு, சிறுமியை பார்க்க கூட அவரின் தாய்க்கு அனுமதி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான், சிறுமியை வேலைக்கு சேர்த்த நாள் முதல் அவருக்கு சரியான உணவு கொடுக்காமல் தொடர்ந்து கொடுமை படுத்தி வந்ததுள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் சசி சிறுமியை தாக்கி, இரும்பு கம்பி உள்ளிட்டவைகளால் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். அத்தோடு, அவரது இரு மகன்களும் சிறுமியின் ஆடைகளை களைத்து, நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் சிறுமியை கட்டி வைத்து, கைகளில் ஆசிட்டை ஊற்றி நடந்த சம்பவங்களை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். 

இந்த நிலையில் சிறுமியின் தாய், தனது உறவினருடன் நேராக அந்த வீட்டிற்கு வந்துபார்த்து சிறுமியை மீட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது மகளுக்கு நடந்த கொடுமைகளை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சசி மற்றும் அவரது 2 மகன்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

கடலூரில் 7 மையங்களில் இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு

Published on 11/12/2023 | Edited on 11/12/2023
Constable Second Level Written Exam in 7 centres in Cuddalore

இரண்டாம் நிலை காவலர் நேரடி தேர்வு 2023, (இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு துறை காவலர்) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் மூலம் 3359 பணியிடங்களை நிரப்பிட எழுத்து தேர்வு கடலூர் மாவட்டத்தில் 1.செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மஞ்சக்குப்பம் 2.செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மஞ்சகுப்பம், 3. கிருஷ்ணசாமி மெமோரியல் மேல்நிலைப்பள்ளி வில்வநகர், 4. பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவனாம்பட்டினம், 5. அரிஸ்டோ பப்ளிக் மேல்நிலைப்பள்ளி திருப்பாதிரிப்புலியூர், 6. சி.கே மேல்நிலைப்பள்ளி ஜட்ஜ் பங்களா ரோடு, 7. செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி கம்பியம்பேட்டை ஆகிய 7 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றது. 

செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் விழுப்புரம் சரக துணை தலைவர் ஜியாவுல் ஹக் பார்வையிட்டார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் உடன் இருந்தார்.