Skip to main content

மளிகை மற்றும் காய்கறி பொருட்களின் விலையை குறைத்து வழங்க வேண்டும்! ஐ. பெரியசாமி வலியுறுத்தல்!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், அந்தந்த பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மருந்துகள் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

அதைத்தொடர்ந்துதான் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியில் இருக்கும் செம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமி தனது தொகுதி மக்களுக்காக பத்து லட்ச ரூபாய் மதிப்பில் கரோனா தடுப்பு மருந்துகளான சோப், கிரிமி நாசினி, முககவசம் உள்பட பொருட்களை, துப்புரவு பணியாளர்களுக்கும் அப்பகுதிகளில் உள்ள 22 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் வழங்கி, அந்தந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கும் இந்த கரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களான முககவசம், கிருமிநாசினி, சோப்புகளை வழங்கவேண்டும் என்று கூறி அனைவருக்கும் வழங்கினார்.

அதன்பின் பத்திரிகையாளரிடம் பேசிய ஐ. பெரியசாமி, கரோனா வைரஸ் மூலம் மக்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காக தலைவர் பொதுமக்களுக்கு மருத்துவ  உபகரணங்களை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இப்பகுதியிலுள்ள ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோர் இந்த கரோனாவை தடுக்கும் மருத்துவ பொருட்களை அப்பகுதியிலுள்ள மக்களுக்கு வழங்கி பாதுகாக்கவேண்டும்.

 

I. Periyasamy


 

அதுபோல் துப்புரவு பணியாளர்கள் இரவு - பகல் பாராமல் உழைக்கிறார்கள். இவர்கள் சுகாதார பணியில் மிக சிறப்பாக செயல்பட்டு வருவதுபோல், அரசுத்துறை அதிகாரிகளும், உள்ளாட்சி நிர்வாகிகளும், போலீசாரும் தடுப்பு பணியில் மிக சிறப்பாக பணியாற்றி வருவது பாராட்டுக்குரியது. 

அதுபோல் நீங்களும் எந்தவொரு தொய்வும் இல்லாமல் கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்து இந்த மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும்.
 

nakkheeran app


 

இந்தப் பணியை தொடர்ந்து நீங்கள் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு இந்த உபகரங்களை கொடுத்து அணிய வலியுறுத்த வேண்டும். ஒரு காலத்தில் கூலி வேலைக்கு போயிட்டு வந்த மக்கள் கையைக்கூட கழுவாமல் சாப்பிட்டது உண்டு. நான் கூட ஒரு காலத்தில் தோட்ட வேலை செய்து விட்டு கை கழுவாமல் சாப்பிட்டு இருக்கிறேன். ஆனால் தற்போதைய சூழல் இதை எல்லாம் மாற்றும் அளவுக்கு உள்ளது. மக்களிடம் இந்த கிரிமிநாசினி மூலம் கைகழுவ சொல்லி அதன்பின் சாப்பிடுமாறு வலியுறுத்தி, மக்களை தொடர்ந்து காப்பாற்ற  வேண்டும் என்றவரிடம், அரசு மூலம் மக்களுக்கு கொடுக்கப்படும் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை  அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறார்களே என்று கேட்டதற்கு... 

இந்த நேரத்தில் அரசு வெளி மார்க்கெட் விலையைவிட  பொதுமக்களுக்கு மிகக் குறைவாக கொடுத்தால்தான் மக்களுக்கும் பிரயோஜனமாக இருக்கும். அதை விட்டுவிட்டு மளிகைப் பொருட்களையும், காய்கறிகளையும் கூடுதல் விலைக்கு கொடுப்பது வருத்தமாக இருக்கிறது. அதை குறைத்துக் கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கூறினார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்