Skip to main content

பைனான்சியரிடம் மோசடி செய்த மளிகை கடைக்காரர் கைது! 

Published on 18/08/2022 | Edited on 18/08/2022

 

Grocer arrested for defrauding financier!

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நேரு வீதியைச் சேர்ந்தவர் தணிகைவேல்(40). இவர், வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது பைனான்ஸ் கடைக்கு அருகே மளிகை கடை நடத்தி வருபவர் அபூபக்கர்(43). இவர், தணிகைவேலிடம் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ஐந்து தவணைகளாக 18 லட்சம் ரூபாய் மாத வட்டிக்கு வாங்கியுள்ளார். பணத்திற்கான வட்டியையும் அவ்வப்போது செலுத்தி வந்துள்ளார். இதனால் தணிகைவேலுக்கு அபூபக்கர் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

 

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அபூபக்கர், தனது மகன் பெயரில் உள்ள காலி மனையை தனது மனைவி அலிமா பானுவுடன் சேர்ந்து தணிகைவேலிடம் விற்பனை செய்வதற்கு விலை பேசி அதில் முன்பணமாக ரூ.10 லட்சமும், இரண்டாவது முறையாக மேலும் ரூ.10 லட்சம் பெற்றுள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டதற்கு ஆதாரமாக திண்டிவனம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மனைவி பெயரில் காலி மனையை கிரைய பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். அதன் பிறகு மேலும் தண்டல் முறையில் மூன்று லட்சம் பணம் பெற்றுள்ளார்.

 

இந்த நிலையில், தணிகைவேலுக்கு அபூபக்கர் மனைவி அலிமா பானு கிரயம் கொடுத்த சொத்து அபூபக்கரின் மகன் பெயரில் உள்ள சொத்து என்பது தெரியவந்துள்ளது. மகன் பெயரில் உள்ள சொத்தை தாய் எழுதிக் கொடுத்தது செல்லாது என்பதால் தன்னை ஏமாற்றும் நோக்கத்தில் அபூபக்கரும் அவரது மனைவியும் ஈடுபட்டுள்ளதாக கூறி அவர்களிடம் இதற்கு விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு அபூபக்கர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து தன்னிடம் வாங்கிய மொத்தம் 41 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பித் தரும்படி அபூபக்கர் அவரது மனைவி அலிமாபாபு ஆகியோரிடம் தணிகைவேல் கேட்டுள்ளார்.

 

பணத்தை தர மறுத்த இருவரும் கூலிப்படை வைத்து கொலை செய்து விடுவதாக அவரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து தணிகைவேல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி அபூபக்கர் அவரது மனைவி அலிமா பானு ஆகியோர் மீது பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் நேற்று அபூபக்கரை கைது செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.