Skip to main content

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் குறை தீர்ப்பு முகாம்!

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

Grievance adjudication camp headed by Additional Director of TN Police

 

தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வாரந்தோறும் புதன்கிழமைகளில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்யவேண்டும் எனத் தமிழ்நாடு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள். 

 

அதன்படி  தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர் தலைமையில், திருச்சி மாநகர மற்றும் திருச்சி சரகத்திலுள்ள திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான தீர்வு கிடைக்கப் பெற்றதா என்று கண்டறியும் வகையில் மாபெரும் மக்கள் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

 

இச்சிறப்பு முகாமில் திருச்சி மாநகரத்திலிருந்து 180 மனுக்களும் திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்டங்கள் அடங்கிய திருச்சி சரகத்திலிருந்து 203 மனுக்கள் என மொத்தம் 383 மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களிடம் தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு), பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தும் விசாரணை செய்தும் பெரும்பாலான மனுக்களில் 283 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது

 

இச்சிறப்பு முகாமில் தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் பேசுகையில், முதலமைச்சர் காவல்நிலையங்களில் பொதுமக்கள் தங்களது புகார்களை எந்த சிரமமுமின்றி பதிவு செய்ய வேண்டும் எனவும், அம்மனுக்கள் மீது குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகக் கூறினார். இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் தங்களது குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

 

Grievance adjudication camp headed by Additional Director of TN Police

 

மேலும் திருச்சி மாநகரம் மற்றும் திருச்சி சரக பகுதிகளில் உள்ள மாணவ-மாணவியருக்கு போதைப் பொருட்களின் தீமைகள் குறித்தும், போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்தும் அமைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு குழுக்கள் கலந்தாய்வு கூட்டம், காவல்துறை கூடுதல் இயக்குநர் சட்டம் & ஒழுங்கு சங்கர், இ.கா.ப., தலைமையில் திருச்சி உறையூர் பிஷப் ஹீபர் கல்லூரி அரங்கத்தில் நேற்று (07.06.2023) மதியம் 3 மணிக்கு நடைபெற்றது.  இக்கலந்தாய்வு கூட்டத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் இ.கா.ப., திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா இ.கா.ப., காவல் துணை ஆணையர், திருச்சி சரகத்தை சேர்ந்த காவல்துறை துணை தலைவர், மாநகர ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.