சென்னை பெருநகர மாநகராட்சியின்2023 ஆம் ஆண்டிற்கான முதல் மாமன்ற கூட்டம் நேற்று (30.01.2023) ரிப்பன்மாளிகையில் மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில்நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்சிங்பேடி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இனி மாமன்ற கூட்டத்தில் தமிழ்நாட்டின் மாநில பாடலானதமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்று மேயர் அறிவித்தார்.