fg

முதுபெரும் தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

Advertisment

தமிழ்நாடு அரசின் முதல் தொல்லியல் துறை இயக்குநராக பணியாற்றியவர் என்ற சிறப்புக்கு சொந்தக்காரரான இவர் மிகவும் திறம்பட பணியாற்றியதால் பல்வேறு விருதுகளை மத்திய, மாநில அரசிடமிருந்து பெற்றுள்ளார். இவரது பணியை பாராட்டி மத்திய அரசாங்கம் கடந்த 2018ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் இரங்கல்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகிறார்கள்.

Advertisment