Skip to main content

திருடனான நீதிபதியின் பேரன்... கலங்க வைக்கும் காதல் தோல்வியின் பின்னணி!

Published on 04/03/2022 | Edited on 04/03/2022

 

The grandson of the thief judge ... the background of the disturbing love failure!

 

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளில் குழந்தைகள் விளையாட வைத்திருக்கும் விலையுயர்ந்த சைக்கிள் காணாமல் போவது தொடர்பான புகார்கள் அதிகரித்த நிலையில், இது தொடர்பாக போலீசாரின் விசாரணையில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பேரன் காதல் தோல்வியால் திருடனான கலங்க வைக்கும் பின்னணி தெரியவந்துள்ளது.

 

சென்னையில் அபிராமபுரம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாகச் சிறுவர்கள் பயன்படுத்தும் விலையுயர்ந்த சைக்கிள்கள் காணாமல் போகும் சம்பவம் தொடர்கதையான நிலையில் இது தொடர்பான புகார்கள் குவிந்தன. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு கிடைத்த ஒரு சிசிடிவி காட்சி விசாரணையின் போக்கையே மாற்றியது. அந்த காட்சியில் சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்த நபர் குடியிருப்பிலிருந்த சைக்கிளைத் திருடும் காட்சி பதிவாகி இருந்தது. கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சியை அடிப்படையாகக் கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சரவணன் என்ற 38 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

 

The grandson of the thief judge ... the background of the disturbing love failure!

 

விசாரணையில் சில கலங்க வைக்கும் தகவல்கள் வெளியானது. மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் பிஎஸ்சி பட்டம் பெற்ற சரவணன் ஓய்வு பெற்ற நீதிபதியின் பேரன் என்பதும், அவரது தந்தை அசோக் லைலண்ட்டில் தலைமை பொறியாளராக பணிபுரிந்ததும் தெரியவந்தது. தனது இளமை பருவத்தில் உடன் படித்து வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார் சரவணன். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதல், தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் மனமுடைந்த சரவணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிச் சுற்றித்திரிந்துள்ளார். 15 வருடங்களுக்கு முன்பே படிப்பை முடித்த சரவணன் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு ஊர் சுற்றிய நிலையில் அவரது பெற்றோரும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டனர்.

 

சூளை பகுதியிலிருந்த 1.5 கோடி ரூபாய் மதிப்புடைய வீட்டை விற்று தனது சகோதரிக்கு அதில் பாதியை கொடுத்துவிட்டார். தனது பங்கை தொழில் செய்வதாக நண்பர்களிடம் பணம் கொடுத்து ஏமார்ந்துள்ளார் சரவணன். இப்படி அனைத்தையும் இழந்த சரவணன் இறுதியில் கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திராவின் எல்லைப் பகுதிகளில் ஹோட்டல்களில் பணிபுரிந்த நிலையில், ஹோட்டல்கள் மூடப்பட்டதால் மீண்டும் சென்னை வந்துள்ளார். அதனையடுத்து விலையுயர்ந்த சைக்கிள்களை திருடி அதனை விற்று உணவு உண்டும், மது அருந்தியும் வந்துள்ளார். மேலும் விசாரணையில், தனது சந்தர்ப்ப சூழ்நிலை தன்னை திருடனாக்கிவிட்டது. நீதிபதியான எனது தாத்தாவின் பெயரை சொன்னால் அவருக்கு அவப்பெயர் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார் சரவணன்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.