Skip to main content

பணம் தராத ஆத்திரத்தில் தாத்தாவை கத்தியால் குத்திய பேரன்!

Published on 26/10/2021 | Edited on 26/10/2021

 

The grandson who stabbed his grandfather in a rage

 

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் முருகேசன் (75) - லட்சுமி தம்பதி. இவர்களுக்கு செல்லத்துரை, பாபு என இரு மகன்கள், ராஜாத்தி என்ற ஒரு மகள் என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அதேபோல் இதில் அனைவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், முருகேசன் மகன் செல்லத்துரை என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது இரண்டாவது மகன் பாபு 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், பெரியவர் முருகேசனின் மனைவி லட்சுமியும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார்.

 

இந்த நிலையில் முருகேசன் தனியாக வசித்துவந்துள்ளார். வயது மூப்பின் காரணமாக கைத்தடி உதவியோடு வாழ்ந்துவந்த முருகேசன், அப்பகுதியில் உள்ள சிலருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து வசூல் செய்துவந்துள்ளார். அதற்கு உதவியாக அவரது இளைய மகன் பாபுவின் மகனும், பேரனுமான சின்னத்துரையை அழைத்துச் சென்று பணம் வசூல் செய்துவந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் முருகேசன் வட்டிக்குக் கொடுத்து வசூலித்த பணத்தில் தனது மகள் ராஜாத்திக்கு இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுத்துள்ளார். இதைக் கண்ட அவரது பேரன் தாத்தாவிடம், “அத்தைக்கு ஏன் பணம் கொடுத்தாய்” என்று கேட்டுள்ளார். இதனால் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி முருகேசன், கழுத்தில் கத்தியால் குத்திய நிலையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.

 

இதுகுறித்து தகவல் அறிந்து அவரது மகள் ராஜாத்தி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப் பதிவுசெய்து குற்றப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ், முருகன், தனிப்பிரிவு எஸ்.ஐ. சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் குற்றவாளி குறித்து விசாரணை நடத்திவந்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில், வெளியாட்கள் யாரும் முருகேசனை கொலை செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து முருகேசன் உறவினர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர். அதன்பேரில் அவரது பேரன் சின்னத்துரை (15) என்பவர் போலீஸ் விசாரணையின்போது முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், தனது தாத்தா முருகேசனை கடந்த 22ஆம் தேதி அதிகாலை கத்தியால் குத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

 

வட்டிக்கு வசூலித்த பணத்தை தனது மகளுக்கு கொடுத்ததோடு மற்ற பேரப் பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்துவிடுவாரோ என்ற கோபத்தில் அவரை கொலை செய்ததாக சிறுவன் சின்னதுரை கூறியுள்ளான். இதையடுத்து போலீசார் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் கூர்நோக்கு சிறுவர் இல்லத்தில் ஒப்படைத்தனர். பெரியவர் முருகேசன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளியைக் கைது செய்ததை அடுத்து மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக் தனிப்படை போலீசார் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.