Skip to main content

இறப்பு சான்றிதழ் வாங்கிய பாட்டி; உயிரோடு வந்த பேரன்!

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

Grandmother falsely claims her grandson passed away and obtains certificate

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கார்த்திகேயன்.  இவரது மனைவி பூங்காவனம். இவர்களுக்கு ஹரிஹரன், கோபி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்திரா நகரில் உள்ள வீடு தொடர்பாக பூங்காவனத்திற்கும் அவரது தாயார் சின்னப்பொண்ணுவுக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் பூங்காவனம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். சில நாட்களில் அவரது கணவர் கார்த்திகேயன் திடீரென மாயமானார். அவர் எங்குள்ளார் என்பது தெரியவில்லை. இதனால் ஹரிகரன் தனது பாட்டி சின்னப்பொண்ணு வீட்டிலும், அவரது தம்பி கோபிநாத் தனது சித்தி மகள் வீட்டிலும்  தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் வீட்டை அபகரிப்பதற்காக நில இடைத்தரகர்களுடன் இணைந்து சின்னப்பொண்ணு தனது பேரன் கோபிநாத் இறந்து விட்டதாகக் கூறி இறப்புச் சான்றிதழ் பெற்று அதன் மூலமாக குடும்ப அட்டையில் இருந்து கோபிநாத் பெயரை நீக்கியதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்து அதிர்ச்சியான கோபிநாத் தனது உறவினர்களுடன் சேர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், எஸ் பி உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். இறப்பு சான்றிதழ் தந்த அரசு அதிகாரிகள், விசாரிக்காமல் குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வருமே என்பதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது,.

 

இதனால் தனது உறவினர்களுடன் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை ஒப்படைப்பதற்காகவும், தனக்கு நீதி கிடைக்காமல் போனதால் ஆட்சியர் அலுவலகத்திலேயே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். இதனை முன்கூட்டியே அறிந்த காவல்துறையினர் கோபிநாத் மற்றும் அவரது உறவினர்களிடமிருந்து மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்ததுடன் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

 

உண்மையை மறைத்து உயிரோடு இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்கியது ஒருபுறம் என்றால் மாயமாய்ப்போன கார்த்திகேயன் எங்கே என்கிற கேள்வி எழுந்துள்ளதால், போலீஸார் அதனையும் அந்தப் பாட்டியிடம் விசாரிக்கத் துவங்கியுள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.