Advertisment
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையைத் தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சித்துறைசுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக,குடியரசுத் தினமான நாளை (26/01/2021) கிராம சபைக் கூட்டம் நடத்தக்கூடாது; மறு உத்தரவு வரும் வரை, கூட்டங்களை நடத்த அனுமதிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.