Skip to main content

கிராம சபைக் கூட்டத்தில் கருப்புக்கொடி ஏந்திய மக்கள் 

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

Grama Saba meeting people conflict with

 

தமிழ்நாடு அரசு சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஆனால், விழுப்புரம் மாவட்டம், அரசூர் கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கைகளை அரசு அதிகாரிகள் முறையாக நிறைவேற்றாமல் காலம் தாழ்த்திவருகின்றனர் எனக் கூறி கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். 

 

அரசூர் ஊராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் அனிதா, ஊராட்சி செயலாளர் மூவேந்தன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது காந்தி நகர் பகுதி மக்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

 

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது; ‘எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கி வந்த நீர் தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் முறையிட்டோம். அதையடுத்து அந்த இடத்தில் இருந்த பழைய நீர் தேக்க தொட்டியை இடித்துவிட்டு, ரூ.20 லட்சம் செலவில் புதிய நீர் தேக்க தொட்டி அதே இடத்தில் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் பழைய தொட்டி இடிக்கப்பட்டு புதிய தொட்டி கட்டுவதற்கு பூமி பூஜையும் போடப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கப்படவே இல்லை. இதை கண்டித்தும், விரைவில் நீர்த்தேக்க தொட்டி கட்டி முடித்து மக்களுக்கு குடிதண்ணீர் வழங்க வலியுறுத்தியும் தான் கருப்புக்கொடி ஏந்தி கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டோம்’ என்று கூறினர். 

 

இந்தத் தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முகமது அலி, தேவராஜன், ஆகியோர் அரசூர் கிராமத்திற்கு வந்து காந்திநகர் மக்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, விரைவில் புதிய நீர்த் தேக்க தொட்டி கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகு கிராம மக்கள் சமாதானம் அடைந்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.