Skip to main content

அதிகாரிகளை சிறைவைத்த கிராம மக்கள்!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

பெரம்பலூர் மாவட்டம் கால்பாளையம் கிராமத்தில் சுதந்திர தினத்தன்று கிராமசபை கூட்டம் பரபரப்பாக நடைபெற்றது. அப்போது கூட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்த வருகைதந்த அதிகாரிகளிடம், தற்போதைய தலைவர் கலைச்செல்வன் மற்றும் கிராம மக்கள் அதிகாரிகளிடம் ஊராட்சி செயலாளர் தமிழ்செல்வன் 100 நாள் வேலை தொகுப்பு, வீடு கட்டுதல், தனிநபர் கழிப்பறை கட்டுதல் ஆகிய திட்டங்களில் பல்வேறு மோசடிகளை செய்து அரசு பணத்தை முறைகேடாக எடுத்துள்ளனர் என்று கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் இதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 

Gram Sabha meeting issue

 



இதற்கு அதிகாரிகள் மெத்தனமாக பதில் அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கிராமசபை கூட்டம் நடத்த வந்திருந்த பெரம்பலூர் ஒன்றிய ஆணையர்கள் முரளிதரன் மோகன் ஆகியோர்களை கிராம மக்கள் சிறைபிடித்தனர். பலமணிநேரம் அவர்களை ஊருக்குள்ளேயே சிறைவைத்து முறைகேடுகளுக்கு நீங்களும் உடந்தையா என வாக்குவாதம் செய்தனர். இப்படி பலமணிநேரம் அதிகாரிகளை கவுல்பாளையம் மக்கள் சிறைவைத்த தகவல் பெரம்பலூர் போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கல்பாளையம் சென்று அதிகாரிகளை சிறைவைத்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். தவறு செய்த ஊராட்சி செயலாளர்கள் மற்றும் அதற்கு துணை போன அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகே அதிகாரிகளை கிராம மக்கள் விடுவித்துள்ளனர். காலை பதினோரு மணி முதல் மாலை 4மணி வரை அதிகாரிகளை சிறை வைத்திருந்த செய்தி மாவட்டம் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊழலுக்கு உடந்தையாக உள்ளவர்களையும் ஊழல் செய்பவர்களையும் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். அப்படி செய்தால்தான் அரசு திட்டங்கள் கிராம ஊராட்சிகள் மூலம் செம்மையாக நிறைவேற்ற முடியும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.