Skip to main content

கிராம சபை கூட்டம்;கூத்து, இளநீர், செடி என கலக்கிய பிரபல நடிகரின் இயக்கம்!

Published on 02/10/2018 | Edited on 02/10/2018

இந்திய பிரதமராக ராஜீவ் காந்தி பதவியில் இருந்தபோது பஞ்சாயத்து ராஜ் சட்டம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த சட்டத்தின் ஒரு பிரிவாக கிராம சபா கூட்டம் நடத்துவது என்கிற கருத்தாக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த கிராம சபைக் கூட்டத்தின் நோக்கம் கிராமத்தில் மத்தில் உள்ள பொதுமக்களின் 80% பேர் இணைந்து ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றினால் அந்த தீர்மானமே இறுதி முடிவானது. உச்சநீதி மன்றங்கள் கூட இதில் தலையிட முடியாது, தலையிடுவதும்மில்லை. மக்கள் தங்களுக்குத் தாங்களே முடிவு எடுத்துக் கொள்ளும் உரிமையை இந்த கிராம சபை க்கூட்டம் வழங்குகிறது.

 

grama saba

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26, மே 1 , ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆம் தேதிகளில் இந்த கிராமசபை கூட்டங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது. இதனை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் வந்து கண்காணிப்பார்கள்.

 

இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 ந்தேதி கிராமசபை கூட்டங்கள் எல்லாக் கிராமங்களிலும் நடைபெற்றது. இந்த கிராம சபா கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என ரஜினியின் மக்கள் மன்றம் தலைமையும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையமும் , கிராமசபை கூட்டங்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவரும் கலந்து கொள்ள வைத்து உங்களது உரிமையும் நிலைநாட்ட அழைத்து வரவேண்டும் என தங்களது அமைப்பு மற்றும் கட்சியினருக்கு உத்தரவிட்டனர். அதன்படி எல்லா மாவட்டங்களிலும் இந்த இரண்டு அமைப்பினரும் பல கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

 

grama saba

 

இதில் வேலூர் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றத்தின் விழிப்புணர்வு பிரச்சாரம் வித்தியாசமாக இருந்தது. அதாவது கடந்த சில தினங்களாக கிராமசபை கூட்டங்கள் தொடர்பாக அதில் மக்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பது தொடர்பாகவும், கிராமசபை கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகள் எந்த அளவுக்கு வலிமையானது என்றும் நோட்டீஸ் அச்சடித்து கிராமங்களில் வழங்கினர். இன்று அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு வேலூர் மாவட்டம்,  சோளிங்கர் ஒன்றியம், மேல்வெங்கடாபுரம் ஊராட்சியில்  வித்தியாசமான முறையில் நடைபெற்றது. இங்கு நடைபெற்ற கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் நாட்டுப்புற கலைஞர்களின் ஆடல் பாடல் மூலம் கிராமசபை கூட்டத்தில் கலந்து கண்டுகொள்ள ஊர்வலமாக சென்றனர். அதோடு ஊர்வலத்தில் சிறு சிறு தட்டிகளில் கிராம சபா கூட்டம் பற்றிய வாசகங்களை எழுதி மக்கள் மன்றத்தினர் கொண்டு சென்றனர். கூட்டத்தில் பெண்கள் அதிக அளவு வந்து கலந்து கொள்ள வேண்டும் என ஒவ்வொரு வீடாகச் சென்று அவர்களையும் அழைத்து வந்து கூட்டத்தில் பங்குபெற வைத்தனர். 

 

கிராமசபை கூட்டங்கள் பற்றி மாவட்ட செயலாளர் ரவி, கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொள்ள கிராம சபா கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இவ்வளவு மகத்துவம் வாய்ந்த கிராம சபா கூட்டங்களின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே நாங்கள் இந்த ஏற்பாடுகளை செய்தோம், அடுத்து வரும் கிராமசபை கூட்டத்துக்கு வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஒன்றிய கிராம ஊராட்சிகளிலும் அப்பகுதியில் உள்ள ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

 

grama saba

 

இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கிராம கைவினை பொருட்களான துணிப்பை, இயற்கை மணம் வீசும் மண் குவலைகளில் மோர், இயற்கை பானமான இளநீர், பசுமை காக்க மரக்கன்றுகள் போன்றவைகளை  வழங்கி அதனால் நமக்கு கிடைக்கும் நற்பண்புகள் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்று சூழல் பாதிப்புகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி  கிராமவாசிகளுக்கும், விவசாயிகளுக்கும் உதவும் வகையில் முடிந்த வரை இயற்கை பொருட்களையே பயன்படுத்துவோம் என்றும் ரஜினி மக்கள் மன்றம் மூலமாக கிராம பொது மக்களிடம் வலியுறுத்தப்பட்டது. 

 

ரஜினி மக்கள் மன்றத்தின் இந்த செயல்களைப்பார்த்து இந்த பகுதியை சேர்ந்த அதிமுக, திமுக, பாமக போன்ற பெரும் அரசியல் கட்சிகள் வித்தியாசமான ரஜினி மக்கள் இந்த முயற்சிகளை பார்த்து கவலையில் உள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கிராம சபைக் கூட்டம்; முதல்வர் மு.க. ஸ்டாலின் உரை

Published on 30/09/2023 | Edited on 01/10/2023

 

Village council meeting C M M.K.Stal's speech

 

தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தி (02.10.2023) அன்று 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டங்களில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளார்.

 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மக்களதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளித்திடும் வகையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கிராம ஊராட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் 4 கிராம சபைக் கூட்டங்கள் என்பதை 6 ஆக உயர்த்தி அரசாணையிட்டு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது உறுதி செய்யப்படுகிறது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்றுரைத்த காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2 ஆம் நாளில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும் வகையில் கிராம சபைக் கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடிவமைக்கப்பட்டு ஊரக வாழ் பொதுமக்களுக்கு இல்லம் தோறும் வழங்கப்பட்டுள்ளது.

 

எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம் என்கிற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கிணங்கவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் எண்ணப்படி அனைவரையும் உள்ளடக்கிய, பொறுப்புள்ள மக்கள் நலனை மையமாகக் கொண்ட உள்ளாட்சி நிர்வாகத்தினை நோக்கிய இந்த கிராம சபையின் கருப்பொருளாக எல்லார்க்கும் எல்லாம் என்கிற மையக் கருத்தின்படி நடத்தப்படவுள்ளது.

 

Village council meeting C M M.K.Stal's speech
கோப்புப்படம்

இவ்வழைப்பிதழ் கிராம சபைக் கூட்டத்திற்கான கருப்பொருளான எல்லார்க்கும் எல்லாம் எனும் மையக் கருத்துடன் அரசு செயல்படுத்தும் அனைத்து முன்மாதிரி திட்டங்கள் மூலம் பயன் பெற்றோர் விவரம், கிராம ஊராட்சியின் வரவு செலவு கணக்கு விவரங்கள், ஊராட்சியால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் பணிகள் மற்றும் அதனால் பயன்பெறும் பயனாளிகள் ஆகியன அடங்கிய கையடக்க விழிப்புணர்வு பிரதிகள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட உள்ளது.

 

அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் முத்தான திட்டங்களான விடியல் பயணம், மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாகத் திட்டச் செயலாக்கம், பயனாளிகள் தேர்வு விவரம், திட்டத்தின் பயன்கள் குறித்து குறும்படங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Village council meeting C M M.K.Stal's speech
கோப்புப்படம்

 

கிராமசபைக் கூட்டங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி குறும்பட உரையின் மூலம் 02.10.2023 அன்று துவக்கி, கிராமசபை குறித்த கருத்துக்களைத் தெரிவித்திட உள்ளார். மேலும், அமைச்சர்கள் தொடர்புடைய மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். கிராமசபைக் கூட்டத்திற்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாகக் கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

இதில், பொதுவான விவாதப் பொருட்களாக, ஊராட்சிகளின் நிதி நிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேகரிப்பு, வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மற்றும் இதர பொருட்களுடன் விவாதம் நடைபெற உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.