Skip to main content

அனுப்பியது பரிந்துரை மட்டுமே... 7 பேரை விடுதலை செய்ய அதிகாரமில்லை...-தமிழக அரசு பதில்!

Published on 12/02/2020 | Edited on 13/02/2020

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, அந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் 7 பேர் விடுதலை தீர்மானம் தொடர்பாக இதுவரை ஆளுநர் முடிவெடுக்கவில்லை.

 

 Govt does not have authority to release 7 persons ...

 

இந்நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்து தன்னை சட்டவிரோதமாக சிறையில் வைத்துள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி மனுதாக்கல் செய்யவில்லை. விடுதலை செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் 7 பேரையும் சட்டவிரோதமாக சிறையில் வைத்துள்ளதால் இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான், ஆளுநர் கையெழுத்துகூட தேவையில்லை என நளினி தரப்பு வாதிட்டது.

இந்நிலையில் அரசு தரப்பில், ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது பரிந்துரை மட்டுமே. 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவாக பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என பதிலளித்து வாதிடப்பட்டது. இதனையடுத்து நளினி சட்டவிரோதமாக சிறையில் இருக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை பிப்.18 ஆம் தேதி ஒத்திவைத்தது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
School Education Department takes action on Action against the protesting teachers

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை நடந்தது. இதனையடுத்து, தமிழக அரசு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்த நிலையில், 19 நாள்கள் தொடர்ந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கூறியதாவது, ‘சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 8, 2024 வரை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். 

அதில், திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 19 நாள்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு போராட்டத்தில் கலந்துகொண்ட நாள்களை சம்பளமில்லா விடுப்பாக அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். மேலும், 19 நாள்களுக்கு உரிய ஊதியம் மற்றும் பிற படிகளை ஒரே தவணையில் பிடித்தம் செய்யவும் வடமதுரை வட்டார கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. .

Next Story

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை; தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Important announcement released by the Department of Education on 5 consecutive days off for schools

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கிடையே, தமிழக அரசு, தமிழகத்தில் நடைபெறும் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று பொது விடுமுறை அளிப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த மக்களவைத் தேர்தல் பணிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் ஈடுப்படுத்தப்பட இருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 4ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டிருந்த தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.