Advertisment

அரசு ஊழியர்களுக்காக நாளை முதல் இயங்கும் அரசு பேருந்துகள்!

govt buses - public sector employees

Advertisment

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களை பச்சை மண்டலமாக்கி நான்காம் கட்ட ஊரடங்கில் இருந்து சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி மே 18 முதல் தமிழகம் முழுவதும் பச்சை மண்டலங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களும் 50 சதவித பணியாளர்களுடன் இயங்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் தங்களது இருப்பில் இருந்து பணியிடத்துக்குச் சென்று வர பேருந்து வசதியினை ஏற்பாடு செய்து தரவேண்டுமென மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், அரசு ஊழியர் சங்கங்களுடன் கலந்து பேசி அரசு போக்குவரத்துக்கு பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்ட தலைநகரத்துக்கு வேலூரில் இருந்தும், தருமபுரி, கிருஷ்ணகிரியில் இருந்து காலையில் ஒரு பேருந்து இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே பேருந்து அதே ஊழியர்களை மீண்டும் மாலை திரும்பி கொண்டு வந்து விடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

50 நாட்களுக்கு பிறகு மே 18 ஆம் தேதி முதல் அரசு பேருந்துகள் அரசு ஊழியர்களுக்காக இயங்கவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

corona virus covid 19 govt bus govt employes lockdown
இதையும் படியுங்கள்
Subscribe