Skip to main content

கவர்னர் ஒப்புதல் விரைவில் கிடைக்கும்... சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை!

Published on 18/10/2020 | Edited on 18/10/2020
cv shanmugam

 

நேற்று விழுப்புரம் வருகை தந்த சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டமாக இயற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த சட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கும் வரை மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடத்த கூடாது என ஒரு நல்ல முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடுத்துள்ளார். தற்போது வெளியான நீட் தேர்வு முடிவில் அரசுப்பள்ளி மாணவர்கள் சிலர் அதிக மதிப்பெண்கள் பெற்று இருப்பது வரவேற்கக் கூடியதாக உள்ளது. இருந்தாலும் அதிகப்படியான அளவில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. இதை பரிசீலனை செய்ததில் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்வது மிக மிக குறைவாக உள்ளது.மேலும் கடந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்கள் நாலு பேருக்குத் தான் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அதை உணர்ந்துதான் கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகள் வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் மருத்துவராக வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் அரசுமருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் பயில 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டம் கவர்னர் ஒப்புதல் பெற்ற பிறகு அமலுக்கு வந்தால் இந்த ஆண்டே கண்டிப்பாக குறைந்தபட்சம் 300 முதல் 325 அரசு பள்ளி மாணவ மாணவிகள் அரசு மருத்துவ கல்லூரியில் படிப்பில் சேரும் ஒரு நல்ல வாய்ப்பினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்படுத்தித் தந்துள்ளார். விரைவில் அதற்கான ஒப்புதலை கவர்னர் அளிப்பார். அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்றார் அமைச்சர் சண்முகம்.

மேலும், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்.பியின் வெளிநாட்டு கம்பெனிகளில் பணம் முதலீடு செய்து பங்குகளை வாங்கியது குறித்தும், அதனால் அவருக்கு சொந்தமான சுமார் 8 கோடி அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறித்தும் கேட்டபோது, அப்படிப்பட்டவர்கள்தான் ஊழலை ஒழிப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இது மக்களுக்கு நன்கு புரியும் என்றார் அமைச்சர் சண்முகம்.

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
West Bengal Governor insists on dismissing the minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்ட்டி மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜியும் அக்கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஆளுநர் ஆனந்த் போஸ் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்துள்ளார்.