Skip to main content

“சமூக வலைத்தளங்களில் விமர்சித்தால் கடும் நடவடிக்கை” - ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

governor tamilisai warne Criticizing uncivilized manner social media will take strict action

 

முதலமைச்சராகவும் பிரதம மந்திரியாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 20 ஆண்டுக்கால அரசியல் பயணம் பற்றிய புத்தகத்தின் தமிழாக்கம் செய்யப்பட்ட ‘மோடி@20 நனவாகும் கனவுகள்’ மற்றும் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.

 

இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் புத்தகங்களை வெளியிட முதலமைச்சர் ரங்கசாமி பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஆ.நமச்சிவாயம், தேனீ.ஜெயக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டனர்.

 

அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “இந்தியா உலகளவில் உயர்ந்து நிற்க பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். புதுச்சேரிக்கு பல வருடங்களாக மாநில அந்தஸ்து தேவை என்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். நரேந்திர மோடி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை வழங்குவார் என்று நம்பிக்கை உள்ளது” என்றார். 

 

அவரை தொடர்ந்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு தான் மீனவர்களுக்கென்று தனி துறை உருவாக்கப்பட்டு, அதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டு, இன்று மீனவர்களுக்குத் தேவையான அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் செய்யப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.

 

governor tamilisai warne Criticizing uncivilized manner social media will take strict action

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசும்போது, “புதுச்சேரியை பெஸ்ட் புதுச்சேரியாக மாற்ற வேண்டும் என்று தான் அனைவரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், சிலர் டெஸ்ட் புதுச்சேரியாக மாற்றி வருவதாக விமர்சனம் செய்கிறார்கள். புதுச்சேரியில் ஆட்சியாளர்கள் எதைச் செய்தாலும் அது மக்கள் நலனுக்காகத் தான் இருக்கும். மோடியைப் பற்றிய இந்தப் புத்தகத்திற்கு முகவுரை எழுதிய இளையராஜா பல விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டார். விமர்சனம் செய்பவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்க்க வேண்டும். மேலும், நாகரிகமற்ற முறையில் விமர்சனங்களை இணையதளத்தில் முன் வைத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்”  என்று குறிப்பிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

'பாஜக காங்கிரஸ் பணம் தருகிறது' - தனி ஆளாக போராட்டத்தில் இறங்கிய சுயேச்சை வேட்பாளர்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'BJP Congress gives money' - Independent candidate goes into the struggle alone

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் தருவதாக குற்றச்சாட்டு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுக, நாம் தமிழர், சுயேச்சைகள் என மொத்தமாக 26 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ என்பவர் காங்கிரஸ் மற்றும் பாஜக நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பணம் தருவதாக புகார் தெரிவித்துள்ளார். உடனடியாக இரு கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனக் கருப்பு கொடியை ஏந்தியபடி சாலையின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். உடனடியாக அங்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.