Skip to main content

7 பேர் விடுதலையில் அற்புதம்மாள் சொன்னதை ஆளுநர் நிறைவேற்ற வேண்டும்;அரசியல் வேண்டாம்-தினகரன்

Published on 15/09/2018 | Edited on 15/09/2018

 

TTV

 

புதுக்கோட்டையில் இன்று மாலை நடக்க உள்ள அண்ணா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு மாவட்டம் முழுவதும் பதாகைள் வைக்கப்பட்டுள்ளது பல இடங்களில் முதல்வரே என்ற வாசகத்துடன் பதாகைகள் இருப்பதால் பலருக்கும் குழப்பம் நீடித்தது இந்த நிலையில்  செய்தியாளர்களை சந்தித்த போது.

 

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல் விரைவில் நடைபெற இருக்கின்ற இரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலில் அமமுக மிகப்பெரிய வெற்றி பெறுவோம்.குட்கா ஊழலில் வேறு யாரையும் மாட்டி விடக்கூடாது என்பதற்காக விஜயபாஸ்கருக்கு மேலும் பதவி கொடுத்து உள்ளனர்.

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலையில் அற்புதம்மாள் சொன்னதைப் போல இதில் அரசியல் தலையீடு வேண்டாம் என்ற அடிப்படையில் கவர்னர் விடுதலை செய்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்றோ நாளையோ பதவி பறிபோகுமா என்ற பயத்தில் உள்ளார் இதை அதிமுக நிர்வாகிகளே என்னிடம் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். தற்போது அதிமுகவினர் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்துப் பேசி வருகின்றனர். தம்பிதுரை பேச்சு பாஜகவினர் அதிமுக கதவை சாத்திவிட்டனர் என்பதை காட்டுகிறது. எப்போது தேர்தல் வந்தாலும் நம்ம விஞ்ஞானி செல்லூர் ராஜு போன்ற அமைச்சர்கள் எல்லாம் அவரது தொகுதியிலயே டெபாசிட் இழந்து வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை வரும். கடம்பூர் ராஜூ எந்த பாதுகாப்பும் இல்லாம அவர் தொகுதி கிராமங்களுக்குள் சென்று பாதிப்பில்லாம திரும்பட்டும் அப்பவே எங்க எம்எல்ஏக்களை அவர் கூட அனுப்பி வைக்கிறேன்.

 

பாஸ்கரன் புதிக கட்சி தொடங்கியது பற்றிய கேள்விக்கு.. ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் வேறு கட்சியில்இருக்க கூடாதா என்ன? தமிழகத்தில் நடக்கும் எப்பாடி ஆட்சி செயல் இழந்து விட்டது இதற்கு உதாரணம் சிறைத்துறை சொகுசு வாழ்க்கை இதற்கு சிறைத்துறை மந்திரி தான் பதில் அளிக்க வேண்டும் என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுமி பலியான வழக்கு; வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Shocking information that came out on A case where a girl was incident on her birthday

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி மான்வி., கடந்த மார்ச் 24ஆம் தேதி மான்வி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, மான்வியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஆன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

அதன்படி, விநியோகிக்கப்பட்ட கேக்கை, மான்வி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மான்விக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி மான்வி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சிறுமி மான்வி பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையின் முடிவானது தற்போது வெளியாகியுள்ளது. அதில், சிறுமி மான்வி சாப்பிட்ட கேக்கில் அளவுக்கு அதிகமான சாக்கரின் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தப்பட்டிருந்ததால், மான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.