ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் - ஆளுநர் புரோஹித் புதிய முடிவு!

02:47 PM Apr 12, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள மிக முக்கிய பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்று. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு, அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் புரோஹித் நியமித்தார். சூரப்பாவின் நியமனத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அப்போதே கடும் கண்டனங்களை தெரிவித்தன. அதை தொடர்ந்து அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுந்து வந்தன.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த விசாரணை ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சூரப்பா இன்றுடன் ஓய்வுபெறுகிறார். இதையடுத்து, பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க உயர்கல்வி செயலாளர் அபூர்வா தலைமையில் வழிகாட்டும் குழுவை அமைத்து ஆளுநர் புரோஹித் ஆணை பிறப்பித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT