ADVERTISEMENT
அண்ணல் அம்பேத்கரின் 65வது நினைவுநாளையொட்டி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செய்துவருகின்றனர். அந்த வகையில், தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஜெகன்மூர்த்தி, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் மலர் தூவி, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments