Skip to main content

இந்த அரசை கவர்னர் கலைக்க வேண்டும்!;அன்புமணி பகீர் பேட்டி!!

Published on 25/12/2018 | Edited on 25/12/2018

 

anpumani interview!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவபட்டியில் நடந்த நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் மத்திய மந்திரி அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசும் போது...

 

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். உள்ளாட்சித் தேர்தலை இந்த அரசு நடத்தாததால் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 6 ஆயிரம் கோடி நிதி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்காக ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தமிழக அரசை கலைத்துவிட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால்தான் கஜா புயல் பணிகள் தாமதமாக நடைபெற்றன. இதை பயன்படுத்தி அரசு அலுவலர்கள் ஊழலில் ஈடுபட்டு இருக்கின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது. தமிழக மக்களுக்கு எதிரான கார்பன் திட்டம், நியூட்ரினோ, மீத்தேன், உள்ளிட்ட திட்டங்களை நிறுத்தி காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

 

 

தமிழகத்தில் கோவிலில் நடந்த முறைகேடு குறித்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார். அந்த வழக்கை நீர்க்கச் செய்யும் வகையில் தமிழக அரசு சிபிஐ விசாரணை கோரி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழக அரசு லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆலைக்கு அனுமதி அளித்துள்ளது. எனவே தாமிரத் தொழிற்சாலை தமிழகத்தில் வேண்டாம் என்று அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி மக்கள் பீதி அடைய செய்யும் வகையில் வெடிச்சத்தம் கேட்டு வருகிறது. அதை மாவட்ட நிர்வாகம் என்னவென்று கண்டறிந்து நடவடிக்கை எடுத்து மக்களின் அச்சத்தை நீக்க வேண்டும் என்று கூறினார் .

 

 

இதில் பாமக தலைவர் ஜிகே மணி, மாநில துணை பொதுச்செயலாளர் பரசுராமன், பொருளாளர் திலகபாமா, கிழக்கு மாவட்ட செயலாளர் ஜான் கென்னடி, மாநில செயற்குழு உறுப்பினர் சிவக்குமார், மாநில துணை தலைவர் கோபால், மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மாநில துணைத்தலைவர் ஆரோக்கியதாஸ், கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் உள்பட  மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வன்மையாக கண்டிக்கிறேன்” - மறுப்பு தெரிவித்த தங்கர் பச்சான்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
thankar bacchan election candidate issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. 

அந்த வகையில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க இடம் பெற்ற நிலையில், அக்கட்சியில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி கடலூர் தொகுதியில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.  இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதே வேளையில் அவர் போட்டியிடவில்லை என ஒரு தகவல் உலா வந்தது.

இந்த நிலையில், அத்தகவல் குறித்து தங்கர் பச்சான் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச் செய்தியை வெளியிட்டவர்கள் யார் எனக் கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்” என்றார்.  

Next Story

வெளியான பா.ம.க. வேட்பாளர் பட்டியல்; இடம் பெற்ற திரைப்பட இயக்குநர்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Release of pmk Candidate List

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. தொடர்ந்து பாஜக, தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட அணியமாகி வருகிறது. இந்தநிலையில் பாஜக கூட்டணியில் பாமக, தான் போட்டியிடும் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அதன்படி, அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - அரசாங்கம், விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்திற்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.