இங்குள்ள ஊழியர்களின் நலன் கருதி 40 சதவீதத்திற்கு மேல் ஊழியர்களை தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பணி நிரவல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை பாதுகாக்கும் விதமாக தமிழக அரசு தொடர்ந்து செயல்படும்" என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ராமச்சந்திரா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சத்திய நாராயண மூர்த்தி, பல்கலைகழக துணைவேந்தர் முருகேசன், பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினர் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏ பாண்டியன், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் சுமார் 56,723 மாணவர்களுக்கு ஆளுநர் பட்டங்களை வழங்கினார். இதில் 432 பேருக்கு முனைவர் பட்டங்களையும், 232 மாணவர்களுக்கு இளம் முனைவர் பட்டங்களையும், 37 பேருக்கும் தங்கப்பதக்கங்களையும் ஆளுநர் வழங்கினார்.