Skip to main content

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவமனையில் உடல்நல பரிசோதனை!

Published on 02/08/2020 | Edited on 02/08/2020
்ப

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. 


மராட்டியத்திற்கு அடுத்ததாக தமிழகத்தில் கரோனா தொற்று அதிகளவு இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர்கள் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டு வருகின்றது.  இந்நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உதவியாளருக்கு கரோனா உறுதியானதால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனை கடந்த வாரம் அறிக்கை வாயிலாக ஆளுநர் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது உடல் நலப்பரிசோதனைக்காக அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா!

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Punjab Governor banwarilal Purohit resigns

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது ராஜினமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பினார். அந்த கடிதத்தில், எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளின் காரணமாகவும், பஞ்சாப் ஆளுநர் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி ஆகிய பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். தயவு செய்து இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோகித் முன்னதாக அசாம், மேகாலயா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளுநராகவும் பணியாற்றி உள்ளார். இவர் 14 வது தமிழ்நாடு ஆளுநராக கடந்த 2017  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல்  2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி வரை வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 

Next Story

குடியரசுத் தலைவர் ஆட்சி; பஞ்சாப் முதல்வருக்கு ஆளுநர் எச்சரிக்கை

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

President's Rule; Governor warns Punjab Chief Minister

 

தான் எழுதிய கடிதத்திற்கு உரிய பதிலளிக்காவிட்டால் பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைக்க போவதாக அம்மாநில முதல்வருக்கு ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பகவந்த் மான் பதவி வகித்து வருகிறார். அம்மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோகித் செயல்பட்டு வருக்கிறார். இந்த சூழலில் ஆளுநர் மாளிகையில் இருந்து பஞ்சாப் அரசுக்கு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் மசோதா குறித்து விளக்கம் அளிப்பது குறித்து கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதற்கு அரசு சார்பில் இருந்து உரிய விளக்கம் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் முதல்வர் பகவந்த் மான்க்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எழுதிய கடிதத்தில், “தான் எழுதிய கடிதங்களுக்கு பஞ்சாப் முதல்வர் பதில் அளிக்க வேண்டும். அப்படி பதிலளிக்காவிட்டால் அரசியலமைப்பு சட்ட நடைமுறை சீர்குலைந்துவிட்டதாக கூறி குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வேன்” என தெரிவித்துள்ளார்.