Skip to main content

அரசு நிகழ்ச்சியில், பொது மேடையில் ஆளுநருக்கும் எம்.எல்.ஏவுக்கும் வாக்குவாதம்!

Published on 02/10/2018 | Edited on 02/10/2018

மகாத்மா காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி கம்பன் கலையரங்கில் இன்று 'தூய்மை இந்தியா' திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் தொகுதி (அ.தி.மு.க) சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பேசும்போது "நூறு சதவீதம் கழிவறை கட்டப்பட்ட மாநிலமாக விளம்பரம் செய்கிறீர்கள். எங்கே கட்டப்பட்டுள்ளது. என்னுடையே தொகுதியிலேயே கட்டப்படவில்லை" என ஆளும் கட்சியையும், தூய்மை இந்தியா திட்டம் பற்றியும் குறைகூறி பேசிக்கொண்டிருந்தார். 

 

​ kiran

 

அதனால் அதிருப்தியடைந்த துணைநிலைஆளுநர்  கிரண்பேடி மைக்கை நிறுத்த உத்தரவிட மைக் துண்டிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த அன்பழகன் கிரண்பேடியிடம், 'நான் பேசிக்கொண்டிருக்கும் போது மைக்கை எப்படி நிறுத்தலாம்' என வாக்குவாதம் செய்தார். அதனால் மேலும் கடுப்பான கிரண்பேடி 'பிளீஸ் கோ... பிளீஸ் கோ... என போகச் சொல்ல, அன்பழகனும் பதிலுக்கு கிரண்பேடியிடம், 'யூ பிளிஸ் கோ...' என்றார். மேலும் அன்பழகன், 'சட்டமன்ற உறுப்பினரை அழைத்து அசிங்கப்படுத்துகிறீர்களா....?' என மேடையிலிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்ய எம்.பி ராதாகிருஷ்ணன் சமாதானம் செய்தார். ஆனால் அதை அன்பழகன் கேட்காமல் மேடையிலேயே கீழே அமர செல்கிறார். அப்போது உள்ளாட்சி தூறை அமைச்சர் நமச்சிவாயம் அன்பழகனின் கையை பிடித்து சமரசம் செய்ய முயற்சிக்க நமச்சிவாயத்தின் கையை வேகமாக தட்டிவிட்ட அன்பழகன் கோபமாக, வேகமாக, ஆவேசமாக பேசியவாறே மேடையிலிருந்து இறங்கி செல்கிறார்.

 

​ kiran

 

மாநிலத்தின் முதன்மை பிரதிநிதிகள் பங்கேற்ற பொது நிகழ்ச்சியில் ஆளுநருக்கும், எம்.எல்.ஏக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் நடந்த மேடை மோதல் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.