Skip to main content

ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டே நாள்... லஞ்ச ஒழிப்புத் துறையால் பெண் அதிகாரி கைது!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய சமூக நல விரிவாக்க அலுவலராக பணி செய்து வந்தவர் ஜெயபிரபா (58). இவர் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் பணி செய்து வருகிறார். இவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். 

 

Government Woman officer arrested

 



கோவிந்தராஜ் என்பவர் தனது உறவினர் பெண்ணுக்கு திருமண உதவி திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்காக முறைப்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். பொதுவாக இதுபோன்ற ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து இருந்தாலும் அந்த விண்ணப்பத்தின் பேரில் சம்பந்தப்பட்ட மணமகன் மணமகள் வீட்டாருக்கு சமூக விரிவாக்க அலுவலர்கள் வீட்டுக்கு வந்து விசாரணை செய்து உதவித்தொகை கிடைக்க உறுதி சான்று அளிப்பது வழக்கம். இவர்கள் உறுதி சான்று எடுத்து பரிந்துரை செய்த பிறகே அரசு நிதி உதவியை வழங்கும். 

இதை பயன்படுத்தி தமிழகத்தில் பெரும்பாலான சமூக விரிவாக்க அலுவலர்கள் மணமகள் வீட்டாரிடம் பணம் பிடுங்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். அதிலும் இந்த ஜெயபிரபா இரண்டு நாட்களில் ஓய்வு பெறும் நிலையில் இருந்ததால் கடந்த சில மாதங்களாகவே தீவிரமான வசூல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். இதற்காகவே திருமண உதவி கேட்டு விண்ணப்பித்தவர்களின் வீடு வீடாக சென்று விசாரணை என்ற பெயரில் அவர்களிடமிருந்து பணம் பிடுங்கும் நோக்கில், மண்டபத்தில் திருமணம் நடைபெற்று இருந்தால் நீங்கள் வசதியானவர் உங்களுக்கு எப்படி உதவி தொகை கிடைக்கும் என்று பல்வேறு முரணான கேள்விகளை கேட்டு பெண்ணின் பெற்றோர்களை திணறடித்து, அதையெல்லாம் சரி செய்து தருவதாக கூறி குறைந்தபட்சம் ரூ. 3000 மேல் பணம் பறித்து வந்துள்ளார்.  

 



இந்நிலையில் கோவிந்தராஜ் என்பவர் ஜெயபிரபாவின் அதிரடியான பேரம் பேசி பணம் கேட்டதை பொறுக்கமுடியாமல் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று விருத்தாசலம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து கோவிந்தராஜ் திருமண உதவித் தொகைக்காக ஜெயபிரபாவிடம் லஞ்சம் கொடுப்பதை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.இந்த செய்தி விருத்தாசலத்தில் மட்டுமல்ல தமிழகம முழுவதும் பரபரப்பாகியுள்ளது.  

ஒரு பெண்ணை பெற்று வளர்த்து படிக்க வைத்து திருமணம் செய்து கொடுப்பது என்பது இப்போதுள்ள விலைவாசியில் எவ்வளவு பெரிய சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் அரசு திருமண உதவி திட்டம் மூலம் கொடுக்கும் தொகை அப்படி பட்ட பெற்றோர்களுக்கு அவர்கள் செய்யும் செலவில் சிறிதளவு ஈடுகட்ட முடியும் என்பதால் அரசுக்கு விண்ணப்பிக்கிறார்கள். அங்கேயும் பணம் வசூலிக்கப்படுவது வேதனைக்குரியது. இந்த கைது சம்பவம் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலர் அலுவலகங்களிலும் இதுபோன்ற சமூக விரிவாக்க அலுவலராக உள்ள பெண்களின் ஈவிரக்கமற்ற வசூல் வேட்டைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமா? என்று பொருத்திருந்து பார்க்கலாம். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.