Skip to main content

தகவல் தெரிவிக்காவிட்டால் 2 ஆண்டு சிறை! தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு எச்சரிக்கை!

Published on 19/12/2018 | Edited on 19/12/2018
warning


 

 

 

தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரத்துறை. தங்களிடம் சிகிச்சைப் பெற வரும் காசநோய் நோயாளிகள் குறித்து அரசுக்குத் தகவல் தெரிவிக்காவிடில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 

 

 
"நமது நாட்டில் ஆண்டுக்கு 1400 காச நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள். நாட்டில் 1 லட்சத்து 217 பேர் காசநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பேருக்கும் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் 2 பேர் வீதம் இறக்கிறார்கள். குறிப்பாக இந்த நோய் காற்றினால் பரவுகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது, நோயின் அறிகுறி தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு இருமல் களி காய்ச்சல் இருக்கும் நோய் பாதிக்கப்பட்டவர் இருமினால் 30 செ.மீ தூரத்திற்கு எதிரில் உள்ளவருக்கு பாதிக்கும்., மனஅழுத்தம் உள்ளவர்கள், சரியாக உணவருந்தாதவர்கள், நேர் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்க்கு வாய்ப்பு உள்ளது. நோய் உள்ளவர்கள் இருமும் போது வாயில் துணி வைத்துகொள்ளவேண்டும்.


 

   தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் காசநோயாளி குறித்து விபரம் தெரிவிக்க 2012ல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. 2015ல் கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. 2016ல் அரசுக்கு தெரியபடுத்தாதவர்கள் மீது 269,270 ஆகிய பிரிவுகளின் கீழ் சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்டும் என அரசு இதழில் தெரியபடுத்தப்பட்டுள்ளது. காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு ரூ.500 சன்மானமும் வழங்கப்படும். குணமடைந்துவிட்டால் நோயாளிக்கும் ரூ.500 வழங்கப்படும். 3 மாதத்திற்கு ஒரு முறை இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில் சிவகங்கையில் நடத்தப்பட்ட முகாமில் நகரில் 2 நபருக்கு காசநோய் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது, அடுத்தவாரம் காரைக்குடியில் காசநோய்கான மருத்துவமுகாம் நடத்தப்படும்." என்கிறார் சிவகங்கை மாவட்ட காசநோய் மருத்துவ பிரிவின் இணைஇயக்குனரான ராஜசேகரன்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.